பக்கம் எண் :

8

மலையருவி

கார்த்தியில்நான்* கண்டெடுத்த - குட்டி
        கனகமணி ரத்தினத்தைப்

    போட்டுத்தான் கழட்டிவைக்கக் - குட்டி
        புண்ணியம்நீ செய்தால்என்ன?
          

35

போறவனே போறவனே - அடே
        பெங்களூரு போறவனே

    மாயவனைத் தந்தவனே - ஒரு
        மருந்துசொல்லிப் போடாமூடா.
     

36

கட்டையெல்லாம் வெட்டிவிட்டு - அடே
        காட்டைஉழப் போறவனே

    கஞ்சிக்கவலை தீர்ந்திட்டாலும் - உனக்குக்
        காதடைப்பும் தீராதடா. 
                  

37

மூக்குச் சிவந்தபொண்ணே - அடி
        மூணுபணம் கேட்டபொண்ணே

    நாக்குச் சிவந்தபொண்ணே - குட்டி
        நான்தாண்டி உன்புருசன்.
       

38

வட்டவட்டப் பாறையிலே - குட்டி
        வரகரிசி தீட்டையிலே

    ஆர்கொடுத்த சாயச்சீலை - குட்டி
        ஆலவட்டம் போடுதடி?                    

39

ஆருங் கொடுக்கவில்லை - மச்சான்
        அவிசாரிநான் போகவில்லை

    வன்பாடு பட்டுநானும் - மச்சான்
        வாங்கினேண்டா சாயச்சீலை.                  

40

சாயச்சீலை ரொம்பச்சிவப்பு - என்னைக்
        கண்டாக்கக் குறுஞ்சிரிப்பு

    குறுஞ்சிரிப்பும் கொண்டாட்டமும் - என்
        கூடவந்தால் தெரியுமடி.
  

41
_______________________________________________

    * கார்த்தி - கார்த்திகை.