கூ
கூடி இருந்தஇடம் - குட்டி
கும்மாளம் போட்டஇடம்
வாழைப்பழம் தின்றஇடம்
- குட்டி
பாழாய்க் கிடக்குதடி.
28
நடையிலே பல்விளக்கிக்
- குட்டி
நாணயமாய்ப் போறபொண்ணே
இடையிலுனக்கு வாழ்வுவந்தால்
- குட்டி
என்னைநீ மதிப்பாயோடி?
29
நல்லநல்ல பில்லைக்காளை
- மாமா
நயனமுள்ள
கொம்புக்காளை
கொம்புக்காளையை வித்துட்டாலும்
- நீ
குமரிகொள்ளப் போறதில்லை.
30
சந்தையிலே மருக்கொழுந்து
- குட்டி
சரசமாத்தான் விற்குதடி
கையிலொரு காசும்இல்லை -
குட்டி
கடன்கொடுப்பார்
ஆரும்இல்லை.
31
ஆலம் விழுதுபோலே - குட்டி
அந்தப்பிள்ளை
தலைமயிரை
ஆளுஒண்ணும் பார்க்காமல்தான்
- குட்டி
ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே.
32
தெற்கத்தி அண்ணன்மாரே
- அப்பா
திருநெல்வேலித் தம்பிமாரே
என்புருசன் வண்டியைத்தான்
- நீங்கள்
எதிர்க்கவரக் கண்டீங்களா?
33
நெத்திக்குச் சுட்டிகட்டி
- மாமா
நேர்விழிக்கு மையெழுதிக்
கள்ள நடைநடக்கும் - அந்தக்
கவுண்டப்பிள்ளை எந்தஊரு?
34
|