|
New Page 1
தொழிலாளர் பாட்டு
சுண்ணாம்பு குத்தும் பாட்டு
சிம்பிசிம்பிஐயா எடுத்துலக்கை
சிற்றெலும்பை நோவுதையா.
1
மன்னிமன்னி எடுத்துலக்கை
மணிக்கட்டெல்லாம்
நோவுதையா.
2
கார்த்தாலே வந்தபெண்கள்
கானலிலே மாளுறோமே.
3
விடியலிலே வந்தபெண்கள்
வெய்யிலிலே மாளுறோமே.
4
வயிறுரொம்பப் பசிக்குதையா
வடித்தகஞ்சி பார்த்துவாரேன்.
5
குலையைப்பசி தாவுதையா
கூழ்ப்பானை பார்த்துவாரேன்.
6
வாழைமரம் வெட்டப்போய்
வாய்போச்சே கோடாலி.
7
வாய்போன கோடாலியைக்
கொல்லன்வீடு சேர்த்துப்போங்க
8
தென்னமரம் வெட்டப்போய்த்
தெறிச்சுப்போச்சே
கோடாலி.
9
தெறிச்சுப்போன கோடாலியை
கொல்லன்வீடு சேர்த்துப்போங்க.
10
_________
|