பக்கம் எண் :

கள்ளன் பாட்டு

183

ராத்திரி வேளையிலே
        காத்திருந்த போலீஸை
    சாதுரிய மாகத்தானும்
        சந்துசந்தாச் சந்திச்சிட்டு
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.
     

36

குதிரைமேலே ஏறிவர
        குதிரைக்காரன் ஓடிவர
    குறுக்கேநின்ற போலீஸ்காரன்
        கும்பிட்டொரு பக்கம்நிற்க
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

37

ஜேப்புக்குள்ளே கையைவிட்டுச்
        சின்னப்பென் சலைஎடுத்துப்
    பீட்டுநோட்டை யுந்திறந்து
        போட்டுவிட்டுக் கையெழுத்து
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

38

முச்சந்தி ரோட்டுமேலே
        மூன்றுபோலீஸ் பாராநிற்க
    முதுகுப்பக்கம் திரும்பச்சொல்லி
        மூன்றடி கொடுத்துவிட்டு
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

39

முந்நூறு பேர்வளைக்க
        முள்ளம்பன்றி போலுலுப்பி
    மூன்றுபேரைப் பஸ்பம்பண்ணி
        முள்ளுவேலி யெல்லாந்தாண்டி
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

40