த
தாலாட்டு
ஆர் அடித்தார்?
ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
1
ஆரடித்தார் நீஅழுக கண்ணேஉன்னை
அடித்தவரைச்
சொல்லிஅழு.
மாமன்உன்னை அடித்தாரோ
- கண்ணேஉன்னை
மல்லிகைப்பூச் செண்டாலே?
விம்மிவிம்மி அழுகாதே -
கண்ணேநீ
வீமனுடை மருமகளே.
பாட்டிஉன்னை அடித்தாளோ
- கண்ணேஉனக்குப்
பால்ஊற்றும் கையாலே?
5
நீட்டிஉன்னை அடித்தாளோ
- கண்ணேஉனக்கு
நெய்ஊற்றும் கையாலே?
நல்லம்மான் கொல்லையிலே
- கண்ணேஉன்
புள்ளிமான் மேயுதம்மா.
புள்ளிமானைப் பிடித்துக்கட்டக்
- கண்ணேஉனக்குப்
பிடிகயிறும்
பொன்னாலே.
தூங்காதே கண்ணுக்குக் -
கண்ணேஉனக்குத்
தூங்குமஞ்சம் தான்இருக்கு.
ஓங்காத கண்ணுக்குக் - கண்ணேஉனக்கு
ஊஞ்சல்கூடத் தான்இருக்கு.
10
அக்காள் அடித்தாளோ -
கண்ணேஉன்
அருமையான கன்னத்திலே?
மச்சான் அடித்தானோ -
கண்ணேஉன்
மஞ்சள்தேய்த்த கன்னத்திலே?
அண்ணன்உன்னை அடித்தானோ
- கண்ணேநீ
அழுகிறதைப் பார்ப்பதற்கு?
|