பக்கம் எண் :

தாலாட்டு

ஆர் அடித்தார்?

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ.

1

ஆரடித்தார் நீஅழுக கண்ணேஉன்னை
        அடித்தவரைச் சொல்லிஅழு.

    மாமன்உன்னை அடித்தாரோ - கண்ணேஉன்னை
        மல்லிகைப்பூச் செண்டாலே?

    விம்மிவிம்மி அழுகாதே - கண்ணேநீ
        வீமனுடை மருமகளே.

    பாட்டிஉன்னை அடித்தாளோ - கண்ணேஉனக்குப்
        பால்ஊற்றும் கையாலே?                       

5

நீட்டிஉன்னை அடித்தாளோ - கண்ணேஉனக்கு
        நெய்ஊற்றும் கையாலே?

    நல்லம்மான் கொல்லையிலே - கண்ணேஉன்
        புள்ளிமான் மேயுதம்மா.

புள்ளிமானைப் பிடித்துக்கட்டக் - கண்ணேஉனக்குப்
        பிடிகயிறும் பொன்னாலே.

    தூங்காதே கண்ணுக்குக் - கண்ணேஉனக்குத்
        தூங்குமஞ்சம் தான்இருக்கு.

    ஓங்காத கண்ணுக்குக் - கண்ணேஉனக்கு
        ஊஞ்சல்கூடத் தான்இருக்கு.                 

10

அக்காள் அடித்தாளோ - கண்ணேஉன்
        அருமையான கன்னத்திலே?

    மச்சான் அடித்தானோ - கண்ணேஉன்
        மஞ்சள்தேய்த்த கன்னத்திலே?

    அண்ணன்உன்னை அடித்தானோ - கண்ணேநீ
        அழுகிறதைப் பார்ப்பதற்கு?