ஆத
ஆத்தாள்உன்னை அடித்தாளோ -
கண்ணேஉன்
அழகான கன்னத்திலே?
நேத்தெல்லாம்நீ எங்கேபோனாய்
- கண்ணேநீ
நெல்வயலைப் பார்த்தையாடி?
15
காத்திருந்தான் காவல்காரன்
- கண்ணேநீ
கண்டையாடி பொன்கண்ணாலே
களமெல்லாம் கதிர்இருக்கு
- கண்ணேநம்
காளியம்மா காவல்காப்பாள்.
மூட்டைப்பூச்சி கடிச்சிருச்சோ
- கண்ணேஉன்
மேனியெல்லாம்
நடுநடுங்க?
தெள்ளுப்பூச்சி கடிச்சிருச்சோ
- கண்ணேஉன்
தேகம்எல்லாம்
நடுநடுங்க?
மெத்தைமேலே தொட்டிலிலே
- என்கண்ணே
மெதுவாகப் படுத்தஉன்னைப்
20
பூவிரித்த தொட்டிலிலே -
கண்ணேஉன்னைப்
பூச்சிவந்து கடிச்சிருச்சோ?
குடைக்குங்கீழே படுத்தஉன்னைக்
- கண்ணே
கொசுகுவந்து கடிச்சிருச்சோ?
பஞ்சணைமேல் படுத்தஉன்னைக்
கண்ணே
பல்லிபய முறுத்திருச்சோ?
பச்சைக்கிளி பட்டுக்கிளி
- கண்ணேநீ
பயப்படாதே பல்லிக்கெல்லாம்.
பஞ்சவர்ணப் பட்டுக்கிளி
- கண்ணேநீ
படுத்துத்தூங்கு பயமில்லாமே.
25
அட்டை கடிச்சிருச்சோ -
கண்ணேநீ
அசந்துநல்லாத் தூங்கையிலே?
தாதிப்பெண்ணு கூடிவரக் -
கண்ணேநீ
தங்கஊஞ்சல் ஆடிவர
நாலுமணி நேரத்திலே - கண்ணேஉன்னை
நாகராசன் காவல்காப்பான்.
|