பக்கம் எண் :

அஞ

தாலாட்டு

221

அஞ்சாதே கலங்காதே - கண்ணேஉன்னை
        அரண்மனையே காவல்காக்கும்.

பஞ்சுமெத்தை பட்டுமெத்தை கண்ணேஉனக்கு
        பரமசிவன் கொடுத்தமெத்தை.

30

மாமனார் கொடுத்தமெத்தை - கண்ணேஉனக்கு
        மல்லிகைப்பூச் செண்டுமெத்தை.

    அக்கா கொடுத்தமெத்தை - கண்ணேஉனக்கு
        அழகான தங்கமெத்தை.

    மேலு வலிக்காமே - கண்ணேநீ
        மெத்தைமேலே படுத்துறங்கு.

_______

மீன் பாட்டு

அயலூர்க் குளத்திலேதான் - கண்ணே
        அயிரைமீனு ஆயிரமாம்.

    அயிரைமீன் பிடிக்கப்போய் - கண்ணேஉன்
        அப்பன்இப்போ வந்திட்டாரே

    அயிரைமீனும் ஆரல்மீனும் - கண்ணே
        அம்புட்டுதாம் அப்பனுக்கு.

    வாளைமீனும் வழலைமீனும் - கண்ணடி
        விதவிதமா அம்புட்டுச்சாம்.

    அரண்மனைக்கு ஆயிரமாம் - கண்ணேஉன்
        அப்பனுக்கு ஆயிரமாம்.
       

5

ஆயிரமும் கொண்டுபோய்க் - கண்ணடி
        அப்பன்விற்று வீடுவர

    அண்டைவீடும் அடுத்தவீடும் - கண்ணடி
        ஆச்சரியப் பட்டார்களாம்.

    கெண்டைமீனும் கெளுத்திமீனும் - கண்ணடி
        குரவைமீனும் பரவைமீனும்