எல
எல்லாமீனும் ஏழாயிரம்
- கண்ணேநான்
ஆயிரத்தைப் பிரித்துவச்சேன்
பிரித்தமீனு ஆயிரத்திலே
- கண்ணேநான்
பிரியமாக ஆறெடுத்தேன்.
10
அயலூரு சந்தையிலே - கண்ணேநான்
ஆறுமீனை விற்றுப்போட்டேன்.
அரைச்சவரன் கொண்டுபோய்க்
- கண்ணேஅதை
அரைமூடியாச் செய்யச்சொன்னேன்.
அரைமூடியைஉன் அரைக்குப்போட்டுக்
- கண்ணேநான்
அழகுபார்த்தேன் ஆலத்தியிட்டு.
அத்தைமாரும் அண்ணிமாரும்
- கண்ணே உன்
அழகைப்பார்த்து அரண்டார்களே
அரண்மனையார் ஓடிவந்து -
கண்ணேஉன்னை
அதிசயமாப் பார்த்தார்களே.
15
ஆராய்ச்சி மணியடித்து -
கண்ணேஉன்னை
அயலூராரே பார்த்தார்களே.
________
கோயில்
ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
ஆடிருக்கு மாடிருக்கு - கண்ணேஉனக்கு
அழகான வீடிருக்கு.
அத்தையம்மாள் வீட்டிலேதான்
- கண்ணேஉனக்கு
ஆளியனும் தான்இருக்கான்.
ஆலம் விழுதுபோல - கண்ணேநீ
அழகான மயிரழகி.
சுப்ரமண்யர் கோயிலிலே
- கண்ணே
சொகுசான தேரிருக்கு.
5
|