பக்கம் எண் :

New Page 1

தாலாட்டு

223

மோளங்களும் தாளங்களும்
        முழங்குதடி கோயிலிலே.

    ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும் - கண்ணேஅங்கே
        ஆடுறாங்க பாடுறாங்க.

    தாசிகளும் வேசிகளும் - கண்ணேஅங்கே
        தாளம்போட்டு ஆடுறாங்க.

    பறத்தெரு வீதியிலே - கண்ணேஅங்கே
        பறச்சிகூடி நிற்கையிலே.

இடைத்தெரு வீதியிலே - கண்ணேஅங்கே
        இடைச்சிகூடி நிற்கையிலே.
    

10

வலைத்தெரு வீதியிலே - கண்ணேஅங்கே
        வலைச்சிகூடி நிற்கையிலே.

    ஊர்கோலம் வாறாராம் - கண்ணே
        உசத்தியான சுப்பிரமண்யம்.

    பாவிகளும் கோவிகளும் - கண்ணே
        பறந்தடிச்சு ஓடிவராங்க.

    கள்ளன்களும் பள்ளன்களும் - கண்ணே
        கலந்தடிச்சு ஓடிவராங்க.

    கடலவலைக் கலந்துக்கிட்டு - கண்ணே
        கடவுளுக்குக் கொடுக்கிறாங்க.                 

15

கண்மணியே பொன்மணியே - கண்ணேநீ
        கண்டையாடி காட்சியெல்லாம்?

    பூஇறைச்சான் பூசாரி - கண்ணேநம்
        பூமிக்கெல்லாம் மழைபெய்ய.

    நெய்விளக்கு ஏத்திவச்சான் - கண்ணே
        நிறையநம்ம நிலம்விளைய.