பக்கம் எண் :

தந

224

மலையருவி

தந்தையின் பயணம்

    ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ.

    சட்டைமேலே சட்டைபோட்டு - உங்கப்பன்
        சரிகைச்சட்டை மேலேபோட்டுத்

    தலைச்சவரம் பண்ணிக்கிட்டு - உங்கப்பன்
        தலைப்பாவும் வச்சுக்கிட்டு

    நெல்லிக்குப்பம் போறத்துக்கு - உங்கப்பன்
        நெற்றியிலே பொட்டுவச்சு

    புதுக்கோட்டை போறதுக்கு - உங்கப்பன்
        புருவமெல்லாம் மைஎழுதி

5

    கோயம்புத்தூர் போறதுக்கு - உங்கப்பன்
        குடைகையி லேபிடித்து

    பாதம்ரெண்டும் நோகாமே - உங்கப்பன்
        பாதக்குறடும் போட்டுக்கிட்டு

    வண்டேவர் ணக்குயிலே - உங்கப்பன்
        வாராரு வழியனுப்ப.

வண்டிமாடு கட்டிஇப்போ - உங்கப்பன்
        வாராரு வழியனுப்ப.

    சாரட்டு வண்டிகட்டி - உங்கப்பன்
        சலங்கைபோட்ட மாடுகட்டி

10

    சாதிப் பிராமணன்போல் - உங்கப்பன்
        சல்லாபமா உட்கார்ந்து

    கோயம்புத்தூர் போறாரு - உங்கப்பன்
        கோழிகூப்பிடும் நேரத்திலே.

    பகையாளி பதுங்கிநிற்க - உங்கப்பன்
        பார்க்காமல் போகையிலே

    பறந்துபாய்ந்தான் பகையாளி - உங்கப்பன்
        பம்மினாரு பயமில்லாமே.