பக்கம் எண் :

பட

தாலாட்டு

225

    பட்டாக்கத்தி வீசையிலே கண்ணேஅவன்
        பஸ்பமானான் பகையாளி.                       

15

    மாடுரெண்டும் மிரண்டோட - உங்கப்பன்
        மதயானைபோல் பின்ஓடி

    மடக்கினாரு மாடுகளைக் - கண்ணே அவர்
        மத்தியான வேளையிலே.

________

வேட்டை

    அடுப்புமூட்டி ஆணங்காய்ச்சிக் கண்ணேநீ
        அசந்துநல்லாத் தூங்கையிலே

    ஆரடித்தார் நீஅழுக - கண்ணேநீ
        அப்பன்கிட்டே சொல்லிவிடு

கானலிலே நாணற்புல் - கண்ணேஅந்தக்
        கலைமான் ஒதுங்கும்புல்

பளப்பளப்பாப் பச்சைப்புல் - கண்ணேநம்
        பசுமாடெல்லாம் தின்னும்புல்

    கருகருன்னு வளரும்புல் - கண்ணேநம்
        காளைமாடு தின்னும்புல்                    

5

    பசுங்கிளியே பாத்தையாடி - கண்ணேநம்
        பரமசிவன் படுத்தபுல்லு?

    கரடிபுலி ஆனைசிங்கம் - கண்ணேநீ
        கண்டையாடி கானலிலே?

    காட்டுமாடும் கேளையாடும் - கண்ணேநீ
        காராம்பசுவும் கண்டையாடி?

    தேனேஎன் திரவியமே - கண்ணேநீ
        தெவிட்டாத செங்கரும்பே

    மானே மரகதமே - கண்ணேநீ
        மகராசன் மருமகளே.

10