வ
வில்லுகொண்டு வேட்டைக்குப்போய்க்
- கண்ணேஅந்த
வேடரெல்லாம் வெலவெலக்க
ஈட்டிகொண்டு காட்டுக்குப்போய்
- மகாராசா
மாட்டினாராம் எட்டுப்புலி.
மானுமரை தான்நடுங்க - மகாராசா
மந்திரவாள் சுற்றிட்டாராம்.
சிறுபுலியும் கரும்புலியும்
- மகாராசா
சின்னபின்னம் செஞ்சுட்டாராம்.
முள்ளம்பன்றி குள்ளம்பன்றி
- கண்ணே
முணுமுணுத்த முரட்டுப்பன்றி
15
காட்டுப்பன்றி மேட்டுப்பன்றி
- மகாராசாவைக்
கண்டோடிச்சாம் கானலிலே.
_______
அறுவடை
ஆராரோ ஆரிரரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
கரிசல்காட்டுப்
புழுதியிலே - கண்ணேநான்
கதிரறுக்கப் போகையிலே
கஞ்சிக் கலயங்கொண்டு -
கண்ணேநான்
களத்துக்கிட்டப்
போகையிலே
அரிவாளைத்தான் இடுப்பில்வைச்சு
- கண்ணேநான்
ஆடிப்பாடிப் போகையிலே
வெற்றிலையும் போட்டுக்கையைக்
- கண்ணேநான்
வீசிவீசிப் போகையிலே
5
சுருக்குப்பையைச்
சொருகிக்கிட்டுக் - கண்ணேநான்
சுற்றிமுற்றிப்
பார்க்கையிலே
சாமைக்கதிர் அறுக்கையிலே
- கண்ணேநல்ல
சாரல்மழை பெய்ததடி.
|