கம
கம்பங்கதிர் அறுக்கையிலே
- கண்ணேநல்ல
கனத்தமழை பெய்ததடி.
நெல்லுக்கதிர் அறுக்கையிலே
- கண்ணே அங்கே
நல்லமழை பெய்ததடி.
சோளக்கதிர் அறுக்கையிலே
- கண்ணேஅங்கே
சோனைமாரி பெய்ததடி.
10
கதிரெல்லாம் கட்டுக்கட்டாக்
- கண்ணேநான்
கட்டிவச்சேன் கைவலிக்க.
நாலாயிரம் சனத்தோடே -
கண்ணேஅங்கே
நானும்போனேன் நாற்றுநட.
ஆளுக்கு நாலாயிரம் - கண்ணேநான்
அடுக்கிவச்சேன் அலங்கியைப்போல்.
குவித்துவச்ச நாற்றெல்லாம்
- கண்ணேஆள்
கும்பலிலே பறந்திருச்சு.
பாத்திகட்டி நாற்றுநட்டேன்
- கண்ணேநான்
பரமசிவன் தயவாலே.
15
பூமாதேவி தயவாலே - கண்ணேநம்
பூமியெல்லாம்
விளைஞ்சிருச்சு.
சோழவந்தான் காளைசோடி
- கண்ணேஇன்னம்
பாளையங்கோட்டைக்
காளைசோடி
நெல்லூரு நெட்டைச்சோடி -
கண்ணேஇன்னம்
கடலூரு கட்டைச்சோடி
சமுத்தூரு காளைகூடக் - கண்ணேஅங்கே
சூட்டிக்கையாச் சூடடிக்கும்.
வட்டமாத்தான் வருகுதம்மா
- கண்ணேஅந்த
வடிவழகுக் காளையெல்லாம்.
20
வருகுதம்மா ஒண்ணொண்ணாய்க்
- கண்ணேஅந்த
வளத்தியான காளையெல்லாம்.
குடுகுடுன்னு வருகுதம்மா - கண்ணேஅந்தக்
குட்டையான காளையெல்லாம்.
|