மய
மயிலைக்காளை வருகுதம்மா
- கண்ணேஅந்த
மரைக்காளையும் வருகுதம்மா.
சலங்கைபோட்ட காளையெல்லாம்
- கண்ணேஅங்கே
சரசரன்னு வருகுதம்மா.
கூடுகொம்புக் காளையெல்லாம்
- கண்ணேஅங்கே
கூடிக்கூடி வருகுதம்மா.
25
வீரிகொம்புக் காளையெல்லாம்
- கண்ணேஅங்கே
விரைசாவிரைசா வருகுதம்மா.
சவலைபாய்ந்த செவலைக்காளை
- கண்ணேஅங்கே
சருக்கிவிழுந்து வருகுதம்மா.
குளுமையிலே நெல்லரசி -
கண்ணேநீ
இளமையிலே மகராசி.
கொஞ்சணுமோ அம்மாஉன்னைக்
- கண்ணேநீ
பஞ்சவர்ணக் கிளிதானோ?
ரத்தினமே பத்தினியே -
கண்ணேநீ
பத்தியான ரதிதானோ?
30
__________
உபதேசம்
மார்கழி மாசத்திலேதான்
- கண்ணேநீ
மகாராசாவைப் பாக்கையிலே
தைப்பொங்கலு காலத்திலே
- கண்ணேநீ
தயிருஞ்சோறும் தின்கையிலே
மாசிமாசக் கடைசியிலே -
கண்ணேநீ
மாமன்வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே - கண்ணேநீ
பங்குச்சொத்தை
வாங்கையிலே
சித்திரைமாசத் துவக்கத்திலே
- கண்ணேநீ
சீர்வரிசை
வாங்கையிலே
5
|