பக்கம் எண் :

New Page 1

தாலாட்டு

229

வைகாசி மாசத்திலே - கண்ணேநீ
        வயலைச்சுற்றிப் பார்க்கையிலே

    ஆனிமாசக் கடைசியிலே - கண்ணேநீ
        அண்ணன்வீடு போகையிலே

    ஆடிமாசம் முடியுமுன்னே - கண்ணேநீ
        அடியெடுத்து வைக்கையிலே

    அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணேநீ
        அரண்மனைக்குப் போகையிலே

    பெரட்டாசி மாசத்திலே - கண்ணேநீ
        பேறுகாலத்துப் போகையிலே                 

10

ஐப்பசி மாசமெல்லாம் - கண்ணேநீ
        அப்பன்வீடு தங்கையிலே

    கார்த்திகை மாசத்திலும் - கண்ணேநீ
        கடவுளுக்குக் கையெடடி.

    திங்கட் கிழமையிலேதான் - கண்ணேநீ
        தேர்பார்க்கப் போகையிலும்

    செவ்வாய்க் கிழமையிலேதான் - கண்ணேநீ
        செவந்திப்பூ வைக்கையிலும்

    புதன்கிழமை விதம்விதமாக் - கண்ணேநீ
        பூந்திலட்டுத் தின்கையிலும்
     

15

வியாழனெல்லாம் வெளியேறாமே - கண்ணேநீ
        வீட்டுக்குள்ளே இருக்கையிலும்

    வெள்ளியிலே விளக்கேற்றிக் - கண்ணேநீ
        வீணைச்சுதி ஏற்றையிலும்

    சனிக்கிழமை பணத்தைஎண்ணிக் - கண்ணேநீ
        சந்தோசமா இருக்கையிலும்

    ஞாயிற்றுக் கிழமையிலும் - கண்ணேநீ
        ஞாயவழி நடந்துபோடி.