பக்கம் எண் :

256

மலையருவி

வாயினாலே வைதவர்கள் - கண்மணியே
        வருத்தப்பட்டுப் போனாரம்மா.
   

90

போகவிட்டுப் புறஞ்சொன்னவர் - கண்மணியே
        போனபோக்குத் தெரியலைம்மா.

    குசுகுசுண்ணு பேசினவர் - கண்மணியே
        குலையெரிஞ்சு போனாரம்மா.

    கேலிபண்ணிச் சிரித்தவர்கள் - கண்மணியே
        கேவலமாய்ப் போனாரம்மா.

    பரியாசம்பண்ணிச் சிரித்தவர்கள் - கண்மணியே
        பயத்தோடே போனாரம்மா.

    அரண்டார்களே அண்ணன்தம்பி - கண்மணியே
        அக்காதங்கை எல்லோருமே.                

95

மறுவார்த்தைகூடப் பேசாமலே - கண்மணியே
        மாமன்மாமி போனார்களம்மா

    மச்சான்கொழுந்தன் மதனிகொழுந்தி - கண்மணியே
        மானங்கெட்டுப் போனாரம்மா

    அண்டைவீடும் அடுத்தவீடும் - கண்மணியே
        ஆச்சரியப் பட்டாரம்மா

    அப்பாவும் நானும்சேர்ந்து - கண்மணியே
        ஆண்டவரைத் தொழுதோம்அம்மா!

________

ராரீ ராரீ

ராரீராரீ ராராரோ - ஏனய்யா
        ராரீ ராராரோ

    வண்டாட ரெண்டசைய வள்ளிகை வேலசைய
    ராரீராரீ ராராரோ என்கண்ணே - ராரீராரோ

    ராரிக்கு ராரிமெத்தை சீராமருக்குப் பஞ்சுமெத்தை
    தூரிக்குத் தூரிமெத்தை சீராமருக்குப் பஞ்சுமெத்தை

    சங்குமுழங்குதா - சிவ - சங்கரர் கோயிலிலே
    சின்னம் முழங்குதா செந்தூராரு கோயிலிலே           (ராரீ)

    ஏன்அழுதே ஏன்அழுதே ஏலம்பூ வாய்நோக
    வம்புக்கு அழுவாளோ - என் அம்மா -
                          வாயெல்லாம் தேன்வடிய         ( ராரீ)