பக்கம் எண் :

இத

தாலாட்டு

255

இத்தனையும் மலடாயிருக்கக் - கண்மணியே
        எத்தனைபாவம் நான்செய்தேனோ!

75

உங்கப்பாவும் நானும்சேர்ந்து - கண்மணியே
        உலகமெல்லாம் சுற்றிப்போனோம்.

    காடென்ன வனமென்ன - கண்ணேநாங்கள்
        கண்டபடி அலைகையிலே

    காட்டுரிஷி கண்ணைமூடிக் - கண்மணியே
        கடவுள் தவம் செய்கையிலே

    கண்டோமம்மா தவமுனியைக் - கண்ணேஅவர்
        காலிலேதான் விழுந்தோம்அம்மா

    தவம்முடித்து ஜபம்முடித்துக் - கண்மணியே
        தந்தாரம்மா மாங்கனியும்.                     

80

மந்திரமும் உச்சரித்துக் - கண்மணியே
        மாங்கனியைத் தந்தாரம்மா.

    வலம்புரியும் இடம்புரியும் - நாங்கள்சுற்றி
        வந்தோமம்மா முனிவர்பக்கம்.

    திருநீறையும் பன்னீரையும் - எங்கள்மேலே
        தெளித்தாரம்மா முனிவர்தானும்.

    தலைமேலே கையைவச்சுக் - கண்மணியே
        தந்தாரம்மா ஆசீர்வாதம்.

    சரியான காலத்திலே - கண்ணேஉன்னைச்
        சந்தோசமாக் கண்டோம்அம்மா.

85

நீபிறந்த நாள்முதலாக் - கண்ணேஎன்
        நிந்தனையும் மாறிற்றம்மா.

    மலடிபெற்ற மலட்டுவரம் - கண்மணியே
        மங்கிற்றம்மா அன்றுமுதல்

    சீர்குலைக்கப் பார்த்தவங்க - கண்மணியே
        சீரழிந்தார் என்கண் முன்னே.

    வெட்கப்படுத்தப் பார்த்தவங்க - கண்மணியே
        வெட்கப்பட்டுப் போனாரம்மா.