ஒ
ஒருகுரங்கு மலையிலே
தொங்கினதாம் குருவி
நான்நல்லஒரு வீட்டைக்கட்டி
மினுக்கட்டான்பூச்சி
விளக்குவச்சேன்.
27
*
* *
ஏச்சுப் புட்டேன்
கீச்சுப் புட்டேன்
ஏழுபணம்
வாங்கிப்புட்டேன்.
28
*
* *
பூபூ புளியம்பூ
பொட்டியிலே வச்சால்
தாழம்பூ
ஈச்சி எலுமிச்சி
பலிகொடுத்தாள் பல்லிச்சி.
29
*
* *
வெள்ளிப் பிரம்பெடுத்து
விளையாடப்
போனேன்
தங்கப் பிரம்பெடுத்துத்
தாலிகட்டப்
போனேன்.
30
*
* *
சிமிச் சிமிச்சாம்
மொச்சைக் கொட்டையாம்
சும்மா இருக்கிற வள்ளிக்
கிழங்காம்
கார வடை பூந்தி லட்டு
ராம் ராம் ராம்
ஆடினேன் - உன்னைப் -
பாடினேன்.
சந்திரரே சூரியரே சாதிப்
பிராமணரே
இந்திரரை நோக்கியல்லோ
ராம் ராம் ராம்
ஆடினேன் - உன்னைப் -
பாடினேன்.
31
*
* *
அண்ணன் பெண்ணே ராமக்கா
அரிசிக் காரன் வந்திட்டான்
சின்ன வீட்டிலே புகுந்துக்கோ
சிலுக்குத் தாளம்
போட்டுக்கோ
புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ
புருசன் கூடப் பேசிக்கோ!
32
_________
|