புலம
புலம்பல்
ஒப்பாரி
கொத்துமல்லி பூப்பூக்க -
என்னைப்பெற்ற அம்மா
கொடிகொடியாக்
காய்காய்க்கக்
கோமுட்டி பெற்றபெண்ணு -
என்னைப்பெற்ற அம்மா
குழந்தையிலே அறுக்கிறேனே!
1
வெங்காயம் பூப்பூக்க -
என்னைப்பெற்ற அம்மா
வரிவரியாக்
காய்காக்க
வாணிச்சி பெற்றபெண்ணு -
என்னைப்பெற்ற அம்மா
வயசிலே அறுக்கிறேனே!
2
மதுரையிலே கூடாரம் - என்னைப்பெற்ற
அம்மா
மல்லிகைப்பூ வியாபாரம்
மல்லிகைப்பூக் கேட்கப்போனால்
- என்னைப்பெற்ற அம்மா
மரத்துக்கொண்ணு கொடுப்பாரே!
3
சந்தையிலே கூடாரம் - என்னைப்பெற்ற
அம்மா
சாமந்திப்பூ வியாபாரம்
சீதைபோய்ப் பூக்கேட்டால்
- என்னைப்பெற்ற அம்மா
செடிக்குஒண்ணு கொடுப்பாரே!
4
மலைமேலே மாடுமேயும் - என்னைப்பெற்ற
அம்மா
மணிக்குழாய் ஊதிவரும்
மணிக்குழாய்ச் சத்தங்கேட்டு
- என்னைப்பெற்ற அம்மா
மங்கை புலம்புறேனே!
5
செடியோரம் மாடுமேயும் -
என்னைப்பெற்ற அம்மா
சீமைக்குழாய் ஊதிவரும்
சீதை புலம்புறது - என்னைப்பெற்ற
அம்மா
சீமைக்கெல்லாம் கேக்கலையோ!
6
பத்துப் பவுன்வாங்கி -
என்னைப்பெற்ற அம்மா
பர்த்தாவுக்குக்
காப்படித்துப்
பத்தூருக் தட்டார்வந்து -
என்னைப்பெற்ற அம்மா
பர்த்தாஎங்கேண்ணு
கேட்டார்களே.
7
|