பக்கம் எண் :

பத

278

மலையருவி

பத்தடுக்கு மெத்தையிலே - என்னைப்பெற்ற அம்மா
        படிக்கிறாருண்ணு நான்இருந்தேன்
    படிப்பை மறந்திட்டாரோ - என்னைப்பெற்ற அம்மா
        பரலோகம்போய்ச் சேர்ந்துட்டாரோ?

8

எட்டுப் பவுன்வாங்கி - என்னைப்பெற்ற அம்மா
        எசமானுக்குக் காப்படித்து
    எட்டூருத் தட்டார்வந்து - என்னைப்பெற்ற அம்மா
        எசமானெங்கேண்ணு கேட்டாங்களே!

9

எட்டடுக்கு மெத்தையிலே - என்னைப்பெற்ற அம்மா
        எழுதுறாருண்ணு நானிருந்தேன்
    எழுத்தை மறந்துட்டாரோ - என்னைப்பெற்ற அம்மா
        எமலோகம்போய்ச் சேர்ந்துட்டாரோ?

10

தலைவலிக்கு தென்றாரே - என்னைப்பெற்ற அம்மா
        தலைசாய்ந்து படுத்தாரே
    தனிச்ச ரெயிலுவருமே - என்னைப்பெற்ற அம்மா
        தனிமருந்து தான்வருமே!

11

நீல வளையல்போட்டு - என்னைப்பெற்ற அம்மா
        நெல்லிக்காய் முகப்புவச்சு
    நீலியுடை வாசலிலே - என்னைப்பெற்ற அம்மா
        நெடுநாளு வாழலையே!

12

பச்சை வளையல்போட்டு - என்னைப்பெற்ற அம்மா
        பாகற்காய் முகப்புவச்சுப்
    பாவியுடை வாசலிலே - என்னைப்பெற்ற அம்மா
        பாதிநாள் வாழலையே!
    

13

கட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற அம்மா
        கல்கண்டு காய்ச்சமரம்
    கல்கண்டு தின்றோமம்மா - என்னைப்பெற்ற அம்மா
        களைசோர்ந்து நிற்கிறோமே!

14

மொட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற அம்மா
        முட்டாயி காய்ச்சமரம்
    முட்டாயி தின்றோமம்மா - என்னைப்பெற்ற அம்மா

        முகஞ்சோர்ந்து நிற்கிறோமே!
                              
15