சு
சுருட்டைப் புளியமரம் என்னைப்பெற்ற
அம்மா
சூதாடும் நந்தவனம்
சூதாடி வீடுவந்தால் - என்னைப்பெற்ற
அம்மா
சூரியனே கையெடுக்கும்.
16
பரட்டைப் புளியமரம் -
என்னைப்பெற்ற அம்மா
பந்தாடும் நந்தவனம்
பந்தாடி வீடுவந்தால் -
என்னைப்பெற்ற அம்மா
பரமசிவன் கையெடுப்பார்.
17
தலையெல்லாம் நான்சீவி
- என்னைப்பெற்ற அம்மா
தாழம்பூ வச்சாலும்
தலையிலே போட்டஎழுத்து -
என்னைப்பெற்ற அம்மா
தாய்கூட அறியலையே!
18
மண்டையெல்லாம் நான்வகிர்ந்து
- என்னைப்பெற்ற அம்மா
மல்லிகைப்பூ வச்சாலும்
மண்டையிலே போட்டஎழுத்து
- என்னைப்பெற்ற அம்மா
மாதாகூட அறியலையே!
19
அச்சடிமெல் லியசவுக்கு -
என்னைப்பெற்ற அம்மா
ஆனைமுக முந்தாணி
அண்ணன்தம்பி போட்டகோடி
- என்னைப்பெற்ற அம்மா
அத்தனையும் பட்டாச்சே!
20
முத்தடி மெல்லியசவுக்கு -
என்னைப்பெற்ற அம்மா
குதிரைமுக முந்தாணி
மூத்தார்வந்து போட்டகோடி
- என்னைப்பெற்ற அம்மா
முழங்காலுக்கும் எட்டலையே?
21
தாலிசெய்த தட்டான்கூட -
என்னைப்பெற்ற அம்மா
தகடுவச்சுச் செய்தானே
தாலிக் கொடிக்குப்பதிலாய்
- என்னைப்பெற்ற அம்மா
நூலைக்கோத்துக்
கொடுத்தானே!
22
என்னதான் செய்வேனம்மா
- என்னைப்பெற்ற அம்மா
ஏதுதான் செய்வேனம்மா
பொன்னான புருசன்இப்போ
- என்னைப்பெற்ற அம்மா
போயிட்டாரே
சிவலோகம்!
23
|