பக்கம் எண் :

ஆர

280

மலையருவி

ஆராத் துயரம்இப்போ - என்னைப்பெற்ற அம்மா
        ஆறுபோலே வருகுதம்மா
    தீராத் துயரம் இப்போ - என்னைப்பெற்ற அம்மா
        திரண்டோடி வருகுதம்மா?

24

சந்திரனும் எங்கேபோனான் - என்னைப்பெற்ற அம்மா
        இந்திரனும் எங்கேபோனான்
    சூரியனும் எங்கேபோனான் - என்னைப்பெற்ற அம்மா
        சூரரெல்லாம் மறைகையிலே?

25

___________

புலம்பல்

இஞ்சி இளம்இஞ்சி - நீபெற்ற
            இந்திரனும் சின்னவனே - இந்த
        இஞ்சிமுற்றித் தோப்பானால்நீ
            இறந்துபோனால் குற்றமில்லை.         
   

1

பாக்கு பழுத்தபாக்கு - நீபெற்ற
            பாலகனும் சின்னவனே - இந்தப்
        பாக்குமுற்றித் தோப்பானால் - நீ
            பரலோகம் ஏறலாமே!

2

பொன்னுப் புளியங்கொட்டை - இன்றைக்கும்
            பூமியிலாடும் பல்லாங்குழி
        குந்திவிளை யாடும்போது - இன்றைக்குத்
            தங்கரதம் ஏறலாமா?
             

3

பொன்னு வரகரிசி - இன்றைக்குப்
            பொழுதுஇல்லாமைப் போச்சு
        தங்கப் பச்சரிசி - இன்றைக்குத்
            தங்கப் பொழுதில்லையா?
  

4

வாய்க்கரிசி கொண்டுவர - இன்றைக்கு
            வழிரொம்ப தூரமாச்சு
        தூரத்திலே விளக்கெரிய - இன்றைக்குச்
            சூறாவளி அமைஞ்சிருச்சே!

5