ஆர
ஆராத் துயரம்இப்போ -
என்னைப்பெற்ற அம்மா
ஆறுபோலே வருகுதம்மா
தீராத் துயரம் இப்போ -
என்னைப்பெற்ற அம்மா
திரண்டோடி வருகுதம்மா?
24
சந்திரனும் எங்கேபோனான்
- என்னைப்பெற்ற அம்மா
இந்திரனும் எங்கேபோனான்
சூரியனும் எங்கேபோனான்
- என்னைப்பெற்ற அம்மா
சூரரெல்லாம் மறைகையிலே?
25
___________
புலம்பல்
இஞ்சி இளம்இஞ்சி -
நீபெற்ற
இந்திரனும்
சின்னவனே - இந்த
இஞ்சிமுற்றித் தோப்பானால்நீ
இறந்துபோனால்
குற்றமில்லை.
1
பாக்கு பழுத்தபாக்கு
- நீபெற்ற
பாலகனும் சின்னவனே
- இந்தப்
பாக்குமுற்றித் தோப்பானால்
- நீ
பரலோகம் ஏறலாமே!
2
பொன்னுப் புளியங்கொட்டை
- இன்றைக்கும்
பூமியிலாடும் பல்லாங்குழி
குந்திவிளை
யாடும்போது - இன்றைக்குத்
தங்கரதம் ஏறலாமா?
3
பொன்னு வரகரிசி -
இன்றைக்குப்
பொழுதுஇல்லாமைப்
போச்சு
தங்கப் பச்சரிசி -
இன்றைக்குத்
தங்கப் பொழுதில்லையா?
4
வாய்க்கரிசி கொண்டுவர
- இன்றைக்கு
வழிரொம்ப தூரமாச்சு
தூரத்திலே விளக்கெரிய
- இன்றைக்குச்
சூறாவளி
அமைஞ்சிருச்சே!
5
|