பக்கம் எண் :

எட

புலம்பல்

281

எட்டுமலைக் கந்தப்பக்கம் - இன்றைக்கு
        இளைப்பாறப் போறாளாம்.
    இளனிக்கண்ணு களைத்திறந்து - இன்றைக்கு
        மேலேபார்த்துப் போறாளாம்.

6

பத்துமலைக் கந்தப்பக்கம் - இன்றைக்குப்
        பசியாறப் போறாளாம்.
    பச்சரிசிச் சோறாக்கி இன்றைக்குப்
        பசியாற்ற முடியலையே!

7

அறைக்கீரை சிறுபாத்திநான் - இந்த
        ஐயருடையதேவி
    அரும்பெடுக்கும் நாளையிலே - எங்களை
        அலையவிட்டுப் போகலாமா?

8

முளகாய்க்கீரைச் சிறுபாத்திநான் - இந்த
        முதலியாரு தேவி
    மொக்கெடுக்கும் நாளையிலே - எங்களை
        மோசஞ்செய்து போகலாமா?

9

கூடத்தை இன்றைக்குக்கட்டி - இங்கே
        குயிலிரண்டு எழுதலையோ?
    கூடம்மாத் திரம்இருக்க - அந்தக்
        குயில்போன மாயம்என்ன?
   

10

மாடத்தை இன்றைக்குக்கட்டி - இங்கே
        மயிலிரண்டு எழுதலையோ?
    மாடம்மாத் திரம்இருக்க - அந்த
        மயில்போன மாயம்என்ன?         
      

11

குளத்தங் கரையோரம்நான் - ஒரு
        குயில்போலக் குந்தியிருந்தேன்
    குயிலென்றும் பார்க்காமே - ஒரு
        குண்டுபோட்டுச் சுட்டுட்டானே!

12

ஆற்றங் கரையோரம் - ஒரு
        அன்னம்போல் குந்தியிருந்தேன்
    அன்னமென்றும் பார்க்காமே - ஒரு
        அம்பைவைச்சு எய்தானே!

13