பக்கம் எண் :

பூம

282

மலையருவி

பூமியைநான் நம்பியல்லோ - ரெண்டு
        புள்ளைகளைப் பெற்றெடுத்தேன்
    பூமிசதி பண்ணிடுச்சே - என்
        புள்ளைதொப்பை வாடிருச்சே!
  

14

மானத்தைநான் நம்பியல்லோ - ரெண்டு
        மக்களைநான் பெற்றெடுத்தேன்
    மானம்சதி தான்பண்ணுதே - என்
        மக்கள்தொப்பை வாடுதே!

15

குருவி சலித்ததென்றால் - அது
        காதத்துக்குக் காதம்போகும்
    பொண்ணு சலித்தேனென்றால் - நான்
        எங்கேதான் போய்ஆறுவேன்!

16

காக்காய் சலித்ததென்றால் - அது
        காதத்துக்குக் காதம்போகும்
    மங்கை சலித்ததென்றால் - நான்
        எங்கேதான் போய்ஆறுவேன்!

17

மானம் சலித்ததென்றால் - அது
        மண்மேலே மழைஊற்றும்
    பொண்ணு சலித்தேனென்றால் - நான்
        எங்கேதான் போய்ஆறுவேன்!

18

சமைந்தபெண் சலித்ததென்றால் - அவள்
        சாக்கடைதூரந் தான்போவாள்
    மங்கை சலித்தேனென்றால் - நான்
        எங்கேதான் போய்ஆறுவேன்?

__________

ஒப்பாரி

காசிக்குப் போனதுண்டு - நான்
        கைவிளக்கைத் தொட்டதுண்டு
    கைவிளக்கைத் தொட்டபாவம் - என்
        கணவனுக்குப் பட்டதம்மா!

1