ம
மதுரைக்குப் போனதுண்டு - நான்
மணிவிளக்கைத்
தொட்டதுண்டு
மணிவிளக்கைத் தொட்டபாவம்
- என்
மன்னவனைப் பட்டதம்மா!
2
* * *
கொத்துமல்லிப் பூப்பூக்கும்
கொடிகொடியாக் காய்காய்க்கும்
கோபாலன் பெற்றபொண்ணு
குழந்தையிலே
கொல்லலாமா?
1
முந்திரிப் பழம்பழுக்கும்
முன்னால் குலைசாயும்
முகத்துக்கு முன்னாலே
முண்டைக்கொடி
ஆகலாமா?
2
கத்திரிப் பூப்பூக்கும்
காசுபோலக் குலைசாயும்
கண்ணுக்கு முன்னாலே
கருங்கொடி ஆகலாமா?
3
* * *
கண்ணு புளியமரம்
கைகாட்டி
ஆலமரம் - நீ
கைகாட்டி வச்சஇடம்
கனத்தகொடி
ஆகலையே!
1
பொன்னு புளியமரம்
பொய்காட்டி
ஆலமரம் - நீ
பொய்காட்டி
வச்சஇடம்
பெரியகொடி
ஆகலையே!
2
* * *
தாழை மலைஓரம்
தங்கியிருக்கப்
போனாலும்
தாழைமுள்ளுக் குத்துறது
தங்கியிருக்க
முடியலையே!
1
|