அந
அந்திபட்டோ செத்தசவம்
- நீங்கள்
ஆக்கிஉண்டு வந்தியளோ?
பொழுதுபட்டோ செத்தசவம்
- நீங்கள்
பொங்கிஉண்டு
வந்தியளோ?
1
ஊரும் இரண்டாச்சோ
- உங்களுக்கு
ஊடே கடலாச்சோ
நாடும் இரண்டாச்சோ
- உங்களுக்கு
நடுவே கடலாச்சோ?
2
அறிந்திருந்தும் வந்தியளோ
அறிவுகெட்ட
மானிடரே
கேட்டிருந்தும் வந்தியளோ
கேடுகெட்ட மானிடரே?
3
காகம் பறக்கவில்லை
- எங்களுக்குக்
கண்டவர்கள்
சொல்லவில்லை
தேகம் பறக்கவில்லை
- எங்களுக்குத்
தெரிந்தவர்கள்
சொல்லவில்லை.
4
கேட்டுவாய் கேட்டுநாங்கள்
கேட்டறிந்து வந்தோமே
ஊர்வாயைக் கேட்டுநாங்கள்
ஓடிஓடி வந்தோமே!
5
சீவன் இருக்கையிலே
- நீஒரு
சீட்டெழுதி விட்டாயில்லை
ஆவி பிரியுமுந்தி -
நீஒரு
ஆளனுப்பி விட்டாயில்லை.
6
கத்திரிக்காய்
விற்றஇடத்தில் - ஒரு
காரையூரான்
சொன்னானடி
பூசனிக்காய் விற்றஇடத்தில்
- ஒரு
புத்தூரான் சொன்னானடி.
7
அருவிப் புலத்திலேநான்
ஆளோசை கேட்டுவந்தேன்
குருவிப் புலத்திலேநான்
குரலோசை கேட்டுவந்தேன்.
8
__________
|