பக்கம் எண் :

அந

286

மலையருவி

அந்திபட்டோ செத்தசவம் - நீங்கள்
        ஆக்கிஉண்டு வந்தியளோ?
    பொழுதுபட்டோ செத்தசவம் - நீங்கள்
        பொங்கிஉண்டு வந்தியளோ?
 

1

ஊரும் இரண்டாச்சோ - உங்களுக்கு
        ஊடே கடலாச்சோ
    நாடும் இரண்டாச்சோ - உங்களுக்கு
        நடுவே கடலாச்சோ?

2

அறிந்திருந்தும் வந்தியளோ
        அறிவுகெட்ட மானிடரே
    கேட்டிருந்தும் வந்தியளோ
        கேடுகெட்ட மானிடரே?

3

காகம் பறக்கவில்லை - எங்களுக்குக்
        கண்டவர்கள் சொல்லவில்லை
    தேகம் பறக்கவில்லை - எங்களுக்குத்
        தெரிந்தவர்கள் சொல்லவில்லை.

4

கேட்டுவாய் கேட்டுநாங்கள்
        கேட்டறிந்து வந்தோமே
    ஊர்வாயைக் கேட்டுநாங்கள்
        ஓடிஓடி வந்தோமே!

5

சீவன் இருக்கையிலே - நீஒரு
        சீட்டெழுதி விட்டாயில்லை
    ஆவி பிரியுமுந்தி - நீஒரு
        ஆளனுப்பி விட்டாயில்லை.

6

கத்திரிக்காய் விற்றஇடத்தில் - ஒரு
        காரையூரான் சொன்னானடி
    பூசனிக்காய் விற்றஇடத்தில் - ஒரு
        புத்தூரான் சொன்னானடி.

7

அருவிப் புலத்திலேநான்
        ஆளோசை கேட்டுவந்தேன்
    குருவிப் புலத்திலேநான்
        குரலோசை கேட்டுவந்தேன்.

8

__________