New Page 1
கொள்ளை மடியில்கட்டி
- நான்
குளத்திலே இறங்கினாலும்
கொள்ளு நனையலையே -
நீங்கள்வச்ச
கோபமும்
தீரலையே!
2
குளத்தைச்சுற்றிக்
கல்பொறுக்கிக்
குதிரைக்கு லாடங்கட்டிக்
குதிரை நெருஞ்சிமுள்ளு
குத்துதம்மா தேகமெல்லாம்.
1
ஆற்றைச்சுற்றிக் கல்பொறுக்கி
ஆனைக்கு லாடங்கட்டி
ஆனை நெருஞ்சிமுள்ளு
அப்புதம்மா தேகமெல்லாம்.
2
*
* *
ஊரெங்கும் உன்சேனை
- நீ
உள்ளே பரதேசி
நாடெங்கும் உன்சேனை
- நீ
நடுவே பரதேசி.
1
சுற்றிநின்று மாரடிக்க
- உனக்குச்
சுற்றத்தார் மெத்தஉண்டு
வளைத்துநின்று மாரடிக்க
- உனக்கு
வங்கிசத்தார்
மெத்தஉண்டு.
2
வந்தார் அழுவினையோ
- உன்
வங்கிசத்தார்
இல்லாமல்
ஊரார் அழுவினையோ -
உன்
உற்றவர்கள் இல்லாமல்!
3
உற்றார் அறியாமல்
- உனக்கு
உடன்மரணம் வந்ததென்ன?
சாதிசனம் அறியாமல்
- உனக்குச்
சதிமரணம் வந்ததென்ன?
4
*
* *
|