New Page 1
தெம்மாங்கு
செம்பிலே சிலைஎழுதி -
மாமா
செல்வத்திலே நான்பிறந்தேன்
வம்பிலேதான் கைகொடுத்து
- மாமா
வார்த்தைக் கிடம்ஆனேனே!
1
கண்டி கொளும்பும்கண்டேன்
- சாமி
கருங்குளத்து மீனுங்கண்டேன்
ஒண்டி குளமும்கண்டேன் -
சாமி
ஒயிலாளைக் காணலையே!
2
ஏழுமலைக் கந்தப்பக்கம்
- சாமி
இஞ்சிவெட்டப் போனபக்கம்
கண்சிவந்து வந்ததென்ன -
சாமி
கடுங்கோபம் ஆனதென்ன?
3
மூக்குத்திக் தொங்கலிலே
- குட்டி
முந்நூறு பச்சைக்கல்லு
ஆளைத்தான் பகட்டுதடி - குட்டி
முந்நூறு பச்சைக்கல்லு.
4
சந்தனம் உரசுங்கல்லு - குட்டி
தலைவாசலைக்
காக்குங்கல்லு
மீன்உரசுங் கல்லுக்கடி -
குட்டி
வீணாசைப் பட்டாயோடி.
5
ஆசைக்கு மயிர்வளர்த்து -
மாமா
அழகுக்கொரு கொண்டைபோட்டுச்
சோம்பேறிப் பயலுக்குநான்
- மாமா
சோறாக்க ஆளானேனே!
6
|