க
காணிக்கை எல்லாங் கொண்டுவந்
தார்களே
ஆயிரம் பேர்களுன்
கோயிலுக்கு
கொஞ்சி விளையாடும்
மாரித்தா யேஉன்னைத்
தஞ்சமென் றவரைக் காப்பாற்றடி.
3
அம்மாஉன் கோவிலைச்
சுற்றிவந் தவர்க்கு
அண்டாது பேய்பிணி
எந்த நாளும்
நாளெல்லாம் நாங்கள்
வருந்துகி றோம்அம்மா
காலன் அணுகாமல் காப்பாற்றடி.
4
வேப்பிலைக் காவடி கட்டிவா
றாங்களே
வேடிக்கை யாஓடி
வாறாங்களே
வாடிக்கை யாகத்தான்
ஞாயிற்றுக் கிழமை
கோடி சனமங்கே வாறாங்களே.
5
வண்டியி லேஅங்கே வாறகூட்
டங்களைக்
கண்டு விலக முடியாதடி
கொண்டு வாறகோழி ஆடுமாடு
எல்லாம்
கோயிலும் கொள்ளாது பாருங்கடி.
6
பள்ளு பறைபதி னெட்டுச்சா
திகளும்
பார்த்துப் பணிந்திட
வேணுமென்று
எல்லை மாரிஎல்லை
தங்கிவா றாள்நம்ம
எல்லைக்குக் காவலா
மாரியம்மா.
7
ஆயிரங் கண்ணுமா
ரியைப்பார்க் கணுமென்று
ஆயிரக் கணக்கா
வாறாங்களே
ஆருந் துணையில்லை
காளியம் மாஎன்னை
ஆதரிக்க வேணுமே
மாரியம்மா.
8
* *
*
|