த
தினைமாவு திரிச்சுக் கிட்டிருந்
தேன்அண்ணா
தெரியாது ஒண்ணும்
மரத்தைப்பற்றி
வினையாக வேங்கையும் தினைக்காட்
டுநடுவே
வீம்புக்கு முளைத்திருக்
கிறதென்றாள்.
101
பயப்படா தேமானே வள்ளியம்
மாஉனக்குப்
பரமன் கந்தவேள் துணையிருப்பான்
பட்சமா இப்போது
பாங்கிப்பெண் ணோடேநீ
பயமில் லாமேஇரு பச்சைக்கிளி.
102
இப்படிச் சொல்லிவிட்
டண்ணன்மார் காட்டிலே
தப்பின தினைக்கதி
ரைக்கொய்ய
இப்பத்தான் நல்ல சமயம்னு
நினைத்துத்
தப்பாமே ஓடிவந் தானேகந்தன்.
103
வேங்கையா நின்ற உருமாறி
வந்தந்த
வேடனை வள்ளியுந் தான்பார்த்து
மாந்திரி கனைப்போல்
மாறுவே சம்போட்ட
மடையா மானமில்லை
யாண்ணுசொன்னாள்.
104
உன்னை மறக்க முடியலை யேமானே
உன்னாலே கண்ணுக் குறக்கமில்லை
எந்நாளு மேநாம் சுகமா
யிருக்கலாம்
என்னைக்கை விடாதே
பொன்மயிலே.
105
*
மாரியம்மன் கும்மி
கும்மி யடியுங்கள் பெண்டுக
ளாநீங்கள்
கூடியே கும்மி அடியுங்கடி
நம்மை ஆளும்நல்ல மாரித்
தாயை
நாடிக் கும்மி அடியுங்கடி.
1
மகமாயித் தாயேஉன் மகிமையை
அறிந்த
மனிசர்கள் ஆருமே இல்லையடி
பகவதி காளியும் காமாட்சி
யும்நீயே
பார்வதி யேஎன்னைக் காப்பாற்றடி.
2
_______________________________________________________
* இதற்குமேல் உள்ள
கண்ணிகள் கிடைக்கவில்லை.
|