பக்கம் எண் :

New Page 1

தெய்வம்

311

முத்துமாரி

ஆதியிலே அமைந்த சக்தி
        எங்கள்முத்து மாரி - அம்மா
    ஆள்கிறாளாம் பூமி யெல்லாம்
        சிங்கத்துமேல் ஏறி.
                           

1

அடுத்தால் சமயபுரம்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    ஆதிசிவன் பெண்சாதியாம்
        சிங்கத்துமேல் ஏறி.

2

கன்னபுரம் வந்திருப்பாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    புன்னை நல்லூர் வந்திருப்பாள்
        சிங்கத்துமேல் ஏறி.

3

தஞ்சா வூரு ராசாவுக்கு
        எங்கள் முத்து மாரி - அம்மா
    சஞ்சலத்தைத் தீர்த்தவளாம்
        சிங்கத்துமேல் ஏறி.
           

4

நார்த்த மலையி லேயிருப்பாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    நாராயணன் தங்கச்சியாள்
        சிங்கத்துமேல் ஏறி.
   

5

வீராம்பட்டணம் வந்திருப்பாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    வீரரெல்லாம் கொன்றவளாம்
        சிங்கத்துமேல் ஏறி.

6

தாராபுரம் வந்திருப்பாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    தீராப்பிணி தீர்ப்பவளாம்
        சிங்கத்துமேல் ஏறி.

7