பக்கம் எண் :

தெய்வம்

315

சிங்கத்து மேலேஏறி எங்கேயும் வருவாள்
    தாங்கமுடி யாதஅம்மை பூட்டியே விடுவாள்
    நீங்க வேப்பிலை விபூதி எல்லாம் தருவாள்
    நினைந்த இடத்துக் கெல்லாம் துணையாத்தான் வருவாள்.     

3

ஆயிரங்கண் மாரிஇல் லாதஇடம் உண்டா
    அவஇருக்கிற பூமி என்னசொல் ரெண்டா
    மாயமாத் தான்வருவாள் பறக்கிற வண்டா - அவள்
    மகிமை தெரியாத மனிசரும் உண்டா?

4

ஆவணி மாசம் கடைசிக் கிழமை - அவள்
    கோயிலுக்கு வாற சனத்தோடே பெருமை
    காவடி களையெல்லாம் கட்டிவாற அருமை - அவள்
    பாதம் பணிந்திட்டால் தீருமே வறுமை.

5

வந்த சனமெல்லாம் வலப்பக்கம் சுற்றி - வந்து
    வரிசை வரிசையாத்தான் தலையிலேபால் ஊற்றி
    இளநீர்த் தண்ணியுங்கூட ஏராளமா ஊற்றி
    கணக்கில்லா மல்தான்நல்ல காணிக்கையும் கொடுத்து.

6

தீச்சட்டி களைத்தலை மேலே எடுத்து
    திருமக மாயிஅம்மா சந்நிதி அடித்து
    ஆடுமாடு கோழி தேங்காய் பழமெல்லாம் கொடுக்க
    ஆடிஓடிப் பாடிச் சாடித்தேடி வாறாங்க பாரம்மா.        

7

________

பூசாரி பாட்டு

ஓம் இண்ணு உச்சரிப்பேன்
    ஆம் இண்ணு நிச்சயிப்பேன்.

1

ஓதுவேன் மதன் கதையை - என்
    மாதுரனே துர்க்கிவீதி.

2

ஓரி மயான ருத்ரி
    வாரி காட்டேரி சூரி!
                  

3