பக்கம் எண் :

314

மலையருவி

மாவிளக்குச் சட்டிகளும்
        காணிக்கையும் கோடி - மகம்
        மாயி உன்னை நாடி
    மனப்பத்தியாப் படைச்சிடுவார்
        மக்கள் உன்னைத் தேடி.

22

காளியென்றும் பேச்சியென்றும்
        கணக்கில் லாப்பேர் எடுப்பாள் - யம
        காலனையும் தடுப்பாள்.
    அனுதினமும் வணங்கி வந்தால்
        ஆயிசுவரம் கொடுப்பாள்.
        

23

ஒருமனசா நிதநிதமும்
        உன்னையே நாங்கள் நம்பி
        உருகுகிறோமே வெம்பி
    மறுகிநீ இருக்கலாமா
        சிங்கத்துமேலே குந்தி?

24

__________

மாரியம்மன் பாட்டு

கண்கண்ட தெய்வம் மாரி அம்மா - நம்ம
        ஈசுவரி மாரி அம்மா
    கண்ணன்ராச கோபாலன்
        தங்கச்சியும் நீயே
    கலியுகத்தி லேவந்து
        அவதாரம் எடுத் தாயே
    என்னநான் சொல்வேன் உன்
        மகிமையைத் தாயே
    ஏழைமக்க ளைநீயும்
        ஆதரிப் பாயே.

1

எத்தனையோ பக்தர்கள் உன்னை அடுத்து
    ஏறினார்களே சொர்க்கம் பாவத்தைத் தடுத்து
    பத்தினியே நீஉன் அருளெல்லாம் கொடுத்து
    பார்த்துக்கொள்ள வேணுமே

                    ஏழை மக்களைக் காத்து.
  

2