சமயபுரம
சமயபுரம் வந்திருக்கும்
எங்கள் முத்து மாரி
- அம்மா
சத்தி யெல்லாம் சாமியடி
சிங்கத்துமேல் ஏறி.
16
கன்னபுரத்தி லேஇருக்கும்
பொன்னே முத்து மாரி
- அம்மா
வந்தாயேநீ சீறி
என்ன சொல்வோம் உன்
மகிமை
அம்மா முத்து மாரி?
17
தஞ்சாவூரு புன்னை நல்லூரு
தாயே முத்து மாரி -
உன்னைத்
தஞ்ச மென்றோம்
கோரி
தயவு வைத்துக் காத்தாள்
அம்மா
சிங்கத்துமேல் ஏறி.
18
ஆயிமக மாயி அவள்
இல்லாத இடம் உண்டா
- இந்தப்
பூமி என்ன ரெண்டா
அனுதினமும் துதிக்காதவர்
தலைஇரும்புத் துண்டா?
19
நார்த்தா மலையி லேயிருப்பாள்
சிங்கத்துமேல் அங்கே
- அம்மா
நாராயணன் தங்கை
பார்க்காமலே
நீயிருந்தால் நாம்
பிழைக்கிறது
எங்கே?
20
சாதி யில்லை பேதம்
இல்லை
ஆதிபரஞ் சோதி -
அம்மே
வாந்திபேதி வியாதி
- இந்தச்
சாதிக் கெல்லாம்
நடக்குதம்மா
உன்தவறா நீதி.
21
|