பக்கம் எண் :

New Page 1

தெய்வம்

319

தோட்டத்தி லேஒரு தொங்கலி லேநல்ல
        தோதகத் திமரப் பக்கத்திலே
    வாட்டமா னஒரு வர்ணப் பழமரம்
        வளர்ந்தி ருந்ததாம் வானமட்டும்.

6

தோட்டத்தில் இருந்த மரத்தி லேஅந்தத்
        தோதகத் திகிட்ட இருந்தமரம்
    பாதகத் துக்கெல்லாம் காரண மாம் - நம்ம
        பாவியா னதுக்கும் காரணமாம்.

7

வாலுங்கொம் பும்முளைத்த பாவிப் பிசாசு
        வந்தானே ஏவாளை ஏமாற்றத்தான்
    வர்ணப் பழத்தின்மேல் கண்ணுவைக் கநல்ல
        வழியெல்லாம் சொல்லிக் கொடுத்தானாம்.

8

    தின்னக்கூ டாதென்று சொன்ன பழத்தைத்
        திரும்பித் திரும்பிப்பாத் தாளாம் ஏவாள்
    பளிங்குபோல் மின்னின அந்தப் பழத்தைப்
        பாவிபாட் டிஏவாள் பறித்தாளாம்.                

9

காடு கரையெல்லாம் பார்க்கப்போ னஆதாம்
        களைப்போ டேவீடு திரும்பையிலே
    பாழும்ஏ வாள்வந்து பழத்தைப்பா திதந்து
        தானும்தின் றாள்தன்னை யேமறந்து.       
       

10

இப்படித் தின்றத னாலேஅம் மாநாம்
        இப்போதும் பாவிக ளாயிருக்கோம்
    எப்படிப் பாவத்தி லேயிருந் துநாம்
        தப்புவோ மென்று தெரியலைடி.
          

11

ஆதாம்செய் தபாவத் தாலேநாம் எல்லாம்
        ஆண்டவ ருக்குவி ரோதமானோம்
    ஆனா லவர்நம்மை அழிக்காம லேதான்
        ஆதரித் தார்அன்பாய் அற்புதமாய்.
            

12

மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி
        மாதா மாரியம்மாள் பெற்றெடுத்த
    நீதிசேசு நம்மை நேர்வழி நடத்தப்

        பாதிராத் திரியிலே பிறந்தாரடி.

13