பக்கம் எண் :

பத

318

மலையருவி

பத்தாங் கரகமடி கன்னி - ஓகோ - என்தாயே
    பணிந்தாடும் பென்கரகம் இப்போ - தாயே 
            

10

பத்துஞ்சொல்லி முடிந்ததடி கன்னி - ஓகோ - என்தாயே
    பத்தினிஉன் வாசலிலே இப்போ - தாயே!

11

___________

ஆதாம் ஏவாள் கதை
(கும்மி)

ஆதியி லேநம்ம ஆண்ட வருவந்து
        ஆதித்தாய் தகப்ப னைப்படைத்துச்
    சோதியா னஏதேன் தோட்டத்தை யுந்தந்து
        சொகுசாக வாழவுஞ் சொன்னாரடி.

1

ஆணுக்கா தாமென்றும் பெண்ணுக்கே வாளென்றும்
        அருமையா கஅவர் பேர்கொடுத்து
    வெறுமையா அவர்களை விட்டுப்போ காமலே
        வேண்டிய வையெல்லாம் கொடுத்தாரடி.

2

 கோடைவெள் ளாமையும் காலவெள் ளாமையும்
        குறையாமல் நன்றாய் விளைந்ததாலே
    போட இடங்கூடப் பற்றா ததனாலே
        ஓடையி லேஅதைப் போட்டாங்கடி.
   

3

ஆறெல்லாந் தண்ணீராம் குளமெல்லாந் தண்ணீராம்
        அழகான ஊற்றிலும் தண்ணீராம்
    மாரிகா லத்திலே மழைபெய்த தனாலே
        வாரிஏ ரியெல்லாம் தண்ணீராம்.

4

ஆரஞ்சு மாதுளம் கொய்யா பலா - இன்னம்
        அத்தியோ டேகூட முந்திரியும்
    மாம்பழம் வாழைசெவ் வாழைப் பழங்களும்
        மம்மாரி யாத்தினம் தின்றார்களாம்.

5