பத
பத்தாங் கரகமடி கன்னி
- ஓகோ - என்தாயே
பணிந்தாடும் பென்கரகம்
இப்போ - தாயே
10
பத்துஞ்சொல்லி முடிந்ததடி
கன்னி - ஓகோ - என்தாயே
பத்தினிஉன் வாசலிலே இப்போ
- தாயே!
11
___________
ஆதாம் ஏவாள் கதை
(கும்மி)
ஆதியி லேநம்ம ஆண்ட
வருவந்து
ஆதித்தாய் தகப்ப னைப்படைத்துச்
சோதியா னஏதேன் தோட்டத்தை
யுந்தந்து
சொகுசாக வாழவுஞ் சொன்னாரடி.
1
ஆணுக்கா தாமென்றும் பெண்ணுக்கே
வாளென்றும்
அருமையா கஅவர் பேர்கொடுத்து
வெறுமையா அவர்களை விட்டுப்போ
காமலே
வேண்டிய வையெல்லாம்
கொடுத்தாரடி.
2
கோடைவெள் ளாமையும் காலவெள்
ளாமையும்
குறையாமல் நன்றாய்
விளைந்ததாலே
போட இடங்கூடப் பற்றா
ததனாலே
ஓடையி லேஅதைப் போட்டாங்கடி.
3
ஆறெல்லாந் தண்ணீராம்
குளமெல்லாந் தண்ணீராம்
அழகான ஊற்றிலும் தண்ணீராம்
மாரிகா லத்திலே மழைபெய்த
தனாலே
வாரிஏ ரியெல்லாம்
தண்ணீராம்.
4
ஆரஞ்சு மாதுளம் கொய்யா
பலா - இன்னம்
அத்தியோ டேகூட முந்திரியும்
மாம்பழம் வாழைசெவ் வாழைப்
பழங்களும்
மம்மாரி யாத்தினம்
தின்றார்களாம்.
5
|