New Page 1
முப்பதாம் வயசுத் துவக்கத்தி
லேயவர்
முழுமனிச னான காலத்திலே
முன்னோர் வழக்கத்தை
அநுசரித் தவர்
முழுக்குஞா னஸ்நானம்
பெற்றாராம்.
- தன்னன னானன
8
மூணு வருசமாப் பூமியி லேவீச
ரோடே தனியாத் திரிகையிலே
வானவர் செய்யுமற்
புதமெல் லாத்தையும்
வரிசை வரிசையாச் செய்தாராம்.
- தன்னன னானன
9
கானாஊரு கல்யாணத்தி
லிருந்து
கல்லறைக் கவர்
போகுமட்டும்
கணக்குமில் லைஒரு வழக்குமில்
லைமனிசர்
கண்ணுக்கு முன்செய்த
அற்புதங்கள்.
- தன்னன னானன
10
*
* *
(வேறு சந்தம்)
தாவீதின் ஊர்தனிலே -
சின்னப்பாலகா
சத்திரத்துப் பக்கத்திலே
- சின்னப்பாலகா
1
மாட்டுக் கொட்டத்திலே
- சின்னப்பாலகா
மாடடையும் கொட்டத்திலே
- சின்னப்பாலகா
2
அஞ்சாறு மாட்டுக்குள்ளே -
சின்னப்பாலகா
அழுதுநீ பிறக்கையிலே
- சின்னப்பாலகா
3
மாடெல்லாம் கதறையிலே -
சின்னப்பாலகா
மனிசரெல்லாம் தூங்கையிலே
- சின்னப்பாலகா
4
சம்மனசு வானத்துலே -
சின்னப்பாலகா
சரமாரியா இறங்கையிலே
- சின்னப்பாலகா
5
மெய்ம்மறந்து
போனார்களே - சின்னப்பாலகா
மேய்ப்பர்வயற் காட்டிலேயே - சி்ன்னப்பாலகா.
6
|