பக்கம் எண் :

சந

தெய்வம்

325

சந்திரனும் சூரியனும் - சின்னப்பாலகா
        சமுத்திரமும் பாடையிலே - சின்னப்பாலகா        

7

வால்வெள்ளியி னாலேயே - சின்னப்பாலகா
        வானசாஸ்திரி வந்தார்களே - சின்னப்பாலகா.

8

ஆட்டையெல்லாம் காட்டுக்குள்ளே - சின்னப்பாலகா
        அலங்கோலமா விட்டுவிட்டே - சின்னப்பாலகா    

9

ஓட்டமா ஓடிவந்தார்கள் - சின்னப்பாலகா
        ஆட்டிடைய ரெல்லாருமே - சின்னப்பாலகா.  
        

10

மார்கழி மாசத்திலே - சின்னப்பாலகா
        மழைசோண்ணு பெய்கையிலே - சின்னப்பாலகா
    

11

சீலையிலே சுற்றிஉன்னைச் - சின்னப்பாலகா
        தீஅனலில் காட்டையிலே - சின்னப்பாலகா   
    

12

புல்லுப் படுக்கையிலே - சின்னப்பாலகா
        புரண்டுநீ அழுகையிலே - சின்னப்பாலகா 
      

13

செல்ல மடியில் உன்னைச் - சின்னப்பாலகா
        நல்லதாய் வைக்கையிலே - சின்னப்பாலகா        

14

பசியெடுக்கும் நேரத்திலே - சின்னப்பாலகா
        பால்கேட் டழுகையிலே - சின்னப்பாலகா        

15

காலுரெண்டும் வலிச்சிருச்சோ - சின்னப்பாலகா
        கத்தித்துள்ளி அழுகையிலே - சின்னப்பாலகா.  
        

16

ஞானவான் மூணுபேரு - சின்னப்பாலகா
        காணிக்கை கொடுக்கையிலே - சின்னப்பாலகா        

17

ராசாநீ என்றெண்ணியே - சின்னப்பாலகா
        சாஷ்டாங்கமும் செய்தார்களே - சின்னப்பாலகா    

18

அவர்கள்மாத் திரமில்லை - சின்னப்பாலகா
        ஆயிரஞ் சம்மனசுமே - சின்னப்பாலகா
           

19

ஆரவாரஞ் செய்தார்களே - சின்னப்பாலகா
        அளவுங்கூட இல்லாமலே - சின்னப்பாலகா.

20