பக்கம் எண் :

பல கதம்பம்

335

தாது வருஷப் பஞ்சம்

தாது வருஷப் பஞ்சத்திலே - ஓ சாமியே
    தாய்வேறே பிள்ளைவேறே - ஓ சாமியே
    அறுபது வருசம் போயி - ஓ சாமியே
    அடுத்தாப் போலே தாதுதானே - ஓ சாமியே
    தைப் பொங்கல் காலத்திலே - ஓ சாமியே
    தயிருக்கும் பஞ்சம் வந்ததே - ஓ சாமியே
    மாசி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
    மாடுகளும் பட்டினியே - ஓ சாமியே
    பங்குனிக் கடைசியிலே - ஓ சாமியே
    பால் மாடெல்லாம் செத்துப் போச்சே - ஓ சாமியே

5

சித்திரை மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
    சீரெல்லாம் குலைந்து போச்சே - ஓ சாமியே
    வைகாசி மாதத்திலேதான் - ஓ சாமியே
    வயிறு எல்லாம் ஒட்டிப் போச்சே - ஓ சாமியே
    ஆனி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
    ஆணும் பெண்ணும் அலறலாச்சே - ஓ சாமியே
    ஆடி மாதத் துவக்கத்திலே - ஓ சாமியே
    ஆளுக் கெல்லாம் ஆட்ட மாச்சே - ஓ சாமியே
    ஆவணி மாசத் துவக்கத்திலே - ஓ சாமியே
    ஆட்டம் நின்று ஓட்டமாச்சே - ஓ சாமியே

10

புரட்டாசிக் கடைசியிலே - ஓ சாமியே
    புரண்டுதே உலகம் பூரா - ஓ சாமியே
    ஐப்பசித் துவக்கத்திலே - ஓ சாமியே
    அழுகையுங்கண் ணீருந்தானே - ஓ சாமியே
    கார்த்திகைக் கடைசியிலே - ஓ சாமியே
    கண்ட இடம் எல்லாம் பிணம் - ஓ சாமியே
    மகாராணி புண்ணியத்திலே - ஓ சாமியே
    மார்கழிப் பஞ்சம் நின்றதே - ஓ சாமியே
    காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
    வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
   

15

 ரோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே
    மேட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓ சாமியே