ஆற
ஆற்றிலேயும் தண்ணியில்லை
- ஓ சாமியே
குளத்திலேயும் தண்ணியில்லை
- ஓ சாமியே
கிணற்றில் பார்த்தால்
உப்புத் தண்ணி - ஓ சாமியே
கிழடு கட்டை குடிக்குந் தண்ணி
- ஓ சாமியே
தண்ணித்தாகத் தால்வறண்டு
- ஓ சாமியே
தவறினது கோடி சனம் - ஓ
சாமியே
கஞ்சியில்லா மேதவித்து
- ஓ சாமியே
காட்டிலே மாண்டது கோடி - ஓ சாமியே
20
கஞ்சித் தொட்டி போட்டார்களே
- ஓ சாமியே
அன்புடனே சலுக்கார்தானே
- ஓ சாமியே
காலம்பர கோடி சனம் - ஓ
சாமியே
கஞ்சி குடித்துக் களையாத்துச்சே
- ஓ சாமியே
பொழுது சாயக் கோடி சனம்
- ஓ சாமியே
பொழைச்சுதே உசிர் தப்பித்து
- ஓ சாமியே
கஞ்சிக்குக் கடிச்சிக்கிற
- ஓ சாமியே
காணத் துவையல் கொடுத்தாங்களே
- ஓ சாமியே.
_________
தொதுவர் பாட்டு
மலைநாட்டு வளப்பங்களை
மன்னர்களே
சொல்லுறேன்கேள்.
இப்பச் சொல்லும் கதைகள்
மெத்த
அற்புதமாய்த் தானிருக்கும்.
செம்மையாச் செவிகொடுத்து
மன்னர்களே கேளுமையா.
நீலகிரி மலையிலொரு
பாதைவழி போகையிலே
பாதையோரம் இருந்தரெண்டு
கூரைவீட்டைக் கண்டேனையா.
5
கூரைவீட்டைப் பார்க்கையிலே
குடியிருக்கும் ஆளு இல்லை.
வீட்டைச் சுற்றி
வளைஞ்சிருக்கும்
பூண்டுகளைச்
சொல்லுறேன்கேள்.
|