பன
பனிப்பயறு பச்சைப்பயறு
பசுந்தான கம்பு
சோளம்
எந்த இடம் பார்த்தாலும்
எள்ளு கேப்பை தினைவரகு
குண்டு சம்பா குடகு சம்பா
கும்பளத்து மிளகு சம்பா
10
சின்னச் சின்னச் சம்பாவும்
சிறுமணிக் கதிர்களும்
பச்சரிசிக் கதிர்களும்
- வெகு
லட்சணமாம் தானியங்களும்
பலசரக்குத் தானியங்களும்
அங்கே நானு கண்டேனையா.
பெட்டிகளும் சட்டிகளும்
குடங்குடமாத் தேனுகளும்
ஆரவள்ளி சூரவள்ளி
அழகான சக்கரைவள்ளி
15
வெந்தயக் கீரைகளும்
வெங்காயத் தாளுகளும்
பச்சிலை பருப்புக்கீரை
பசுந்தான மணலுக்கீரை
இன்னம் இன்னம் பலமாதிரியும்
மன்னர்களே
சொல்கிறேன் கேள்.
இப்படிநான் பார்த்துக்கிட்டு
அப்புறம்நான் போகையிலே
மன்னா ஒரு புதுமையைஎன்
கண்ணாலேநான் கண்டேனையா.
20
பத்துத் தொதுவர் ஆண்பெண்ணைப்
பார்த்தேனையா கானலிலே.
அவுங்களைநான் கண்டதுமே
திகைத்துப் போய்த்தான்
நின்றேனே.
அவுங்களுக்கு ஆடை யில்லை
அம்மாமார்க்குப்
புடைவை யில்லை.
பிறந்த கோலத் தோடேயும்
பரந்த கோலத் தோடேயும்
|