பக்கம் எண் :

ஆண

ஆண் பெண் தர்க்கம்

கெஞ்சலும் மிஞ்சலும்

    ஐந்நூறு மைல்க டந்து
        அம்மா உன்னைத் தஞ்சமென்று
    அலங்கோலப் பட்டு வந்தேன்
        ஆதரிக்க வேணும் தாயே
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                    அன்னமே ஏ ஏ.          
    

1

ஆரடா நீப யலே
        அநியா யமா அலப்புறியே
    போடாநீ சொல்லடா
        பெரிய பேச்சுப் பேசாதேடா
    வாது செய்யா தடா
        வந்தவழி போய்ச்சேரடா
                    சேரடா ஆ ஆ.
                

2

அடாபு டாண்ணு என்னை
        அநியாயமா ஏன்பேசுறாய்
    அத்தை மகள்னுதான் உன்னை
        ஆவலாநான் பார்க்க வந்தேன்
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                     அன்னமே ஏ ஏ.
            

3

அத்தை மகள்னு நீஎன்னை
        அதிகாரமாச் சொன்னையேடா
    உங்கப்பன் உங்கம்மா ஊரெதுடா
        வெட்கங் கெட்ட பையாநீ
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                      சேரடா ஆ ஆ.

4