அப
அப்பன்பேர் ஆறுமுகம்
ஆத்தாள்பேர் ஆராயம்மா
என்பேரு ஏகாம்பரம்
எங்கஊர் ஏர்க்காடம்மா
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
5
கொள்வினையும்
கொடுப்பினையும்
கொண்டுவந்த குறப்பயலே
கொஞ்சங்கூட நெஞ்சஞ்சாமல்
வஞ்சகமாய்ப்
பேசுறையே
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச் சேரடா
சேரடா
ஆ ஆ.
6
கண்ணேஎன் கண்மணியே
கல்நெஞ்சுக் காரியே
சொன்னேன் என்காரி யத்தைச்
சொல்லால் அடிக்கிறையே
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
7
ஏண்டாநீ இங்கே வந்தாய்
இரப்பிரந்த பறைப்பயலே
வேண்டாம் உனக்குவம்பு
விரைவாப் போயிடு
நம்பு
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
8
வாணாளை வீணாக்காமல்
வம்பாக்கஷ் டப்படாமல்
போனால் நல்லதடாப்பா
பொழுது விழுகுமுன்னே
|