|
மன்னன் சொல் விருத்தம் |
“வடகரை நாடு காவல் |
வல்லசேப் பிளையான் கேளாய் ! |
துடியிடை மாது புத்தூர் |
சோமாசி பட்டர் பெற்ற |
மடமயில் மாது தன்னையுன் |
மகன்சிறை யெடுத்தொளித்ததாக |
வடமொழி மறையோ ரெல்லாம் |
வகையெனக் குரைசெய் தாரே” |
|
வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளையானே, குணசீல மங்கலம் புத்தூர் சோமாசி பட்டர் மகளாகிய ஆரிய மாலையை உன்மகன் காத்தவராயனானவன் சிறையெடுத்துப் போனதாக வடகரை பிறாமணாள் ஆதியந்தமும் நம்மிடம் முறையிட்டார்கள். அப்படி நம் காலத்தில் செய்யலாமோ? சேப்பிளையான் ! |
சேப்பிளையான் சொல்விருத்தம் |
அருமறை புகழ வாழும் |
ஆரியப் பேந்திர மன்னா ! |
மருமலர்ப் புத்தூர் தன்னில் |
மாலையை எனது மைந்தன் |
சிறையெடுத் தொளித்த தாகத் |
தேவரீர் சொல்லக் கேட்டேன் |
கருவுடன் எங்கும் தேடிக் |
கட்டியே தருகு வேனே” |
|
வசனம் : ஆகோ கேளுங்கள் அய்யா சாமி ஆரிய மாலையை என்மகன் சிறையெடுத்து ஒளித்ததை யானறியேன். அப்படி உண்டானால் சமூகத்தில் கட்டித் தருகுவேன் அய்யா சாமி. |
நடை |
நாட்டுப்பாடல் |
சேப்பிளையான் கூற்று |
ஆரியப்பூ ராசாவே ஆண்டவனே கும்பிடுறேன் ! |
காரியமாய் கேட்டருளும் என் கர்த்தாவே சொல்லுகிறேன் |
|
என்னுடைய காவலென்றால் எமனும் வந்தண்டானே |
உன்னுடைய தேசமதில் உத்தமனே ஆரியப்பா. |