பக்கம் எண் :

12காத்தவராயன் கதைப்பாடல்

மதித்த சந்திராதி யுதித்தவளர் கல்லுங் காவேரி
உதித்த புல்லும் பூமிகளும் உள்ள நாள் எத்தனையோ
 
அத்தனை நாளைக்கும் அரசுகாவலும் கொடுத்தீர்
பெத்தாய் செய்திடினும் பிழைதாளாப் புண்ணியனே
 
புண்ணியா திரிசிரபுரத் ததிபதியே பேராளா
என்னும் சுகத்தில் இருக்குமெங்கள் ஆண்டவனே
 
ஆண்டவனே பூலோகம் ஆரியப்பூ ராசேந்திரா
வேண்டும் பணிவிடை செய்ய விண்ணப்பம் தெண்டமய்யா
 
நந்திதிரு வோங்கி நாதர்மலைக்கும் கிழக்கு
பந்துசனம் ஆலம் பாக்கத்திற்கும் நேர்மேற்கு
 
இதைச் சேர்ந்த கிராமமெல்லாம் என்னுடைய காவலய்யா
மதுரைக்கும் கிழக்கு வல்லம் தஞ்சா வூர்க்குமேற்கு
 
மொழிக்கு மொழிதவறாத முத்திளையான் காவலய்யா
சொன்ன மொழி தவறாதன் தோகைமலைக்கும் கிழக்கு
 
பொன்விளைந்தாம் பட்டிவரைக்கும் பொன்னிளையான் காவலய்யா
முத்திளையான் பொன்னிலையான் முடிபெருத்த சேப்பிளையான்
சேப்பிளையான் சொல் விருத்தம்
செந்திரு வல்லி மார்பா
   திருசிர கிரிநா டாளும்
சுந்தர மதன ரூபா
   சோம சேகரனே போற்றி
அந்தணர்க் கருளும் செம்பொன்
   ஆரியப் பேந்திர மன்னா
எந்தனை அழைத்த சேதி
   இன்னதென் றியம்பு வாயே.
 
     வசனம் : ராசாதிராசா ராசபரமேஸ்வரா ராசமார்த் தாண்டா! நல்லார்க்கு மித்ரு! பொல்லார்க்குச் சத்ரு ! வித்தையில் சரஸ்வதி ! புத்தியில் பிரகஸ்பதி! அதிபதியாய் திருசிரபுரம் ஆளப் பட்ட ஆரியப்பூ ராசேந்திரா! பறாக்கு. எச்சரிக்கை. அடியேனை அழைப்பித்த காரியம் அருளிச்செய்ய வேணும் சுவாமி3