|
தாப்பரியமாக உந்தன் சமூகத்தில் வாய்ப்புதைத்து |
சேப்பிளையான் சொல்ல செவிகொடுத்து நீர்கேளும். |
|
மாற்றலரை வென்ற மகராசன் ராசேந்திரா |
கீர்த்திப் பிரதாபமுள்ள கிருபா சமுத்திரரே |
|
தங்கமகா மேருவே, சகல சாம்ராச்சிய யோகமுள்ள |
சிங்காதனக் கொலுவில் நீர் தேவேந்திரனுக் கிணையாய் |
|
வேதப் பிரதாபம் மிகுமறைநூல் வல்லவர்க்கு |
நீதிப் பிரதாபமுடன் நீயே கொடைக்கர்ணன். |
|
சங்கரனு மாமுதலா சதுர்முக பிர்மா1 அடியார் |
தாங்கள் களிக்க அளித்திடும் வாரிதியே. |
|
கல்விக் கரசே கருணைப் பிரதாபமுள்ள |
செல்வத்துரையே உலகம் செழிக்கவந்த சீமானே. |
|
கரறாச மார்த்தாண்ட கண்டப் பிரசண்டனல்ல |
பரறாசர் கொண்டாடும் பாக்கிய மகறாசேந்திரா. |
|
அடியார்களுக் கென்று அதிககலி தானோட |
மிடிதீர்க்க வந்த முகிலையொத்த கையோனே. |
|
பொய்யாத வாசகனே ! புண்ணிய சிரோண்மணியே ! |
மெய்யாக தேசம் விளங்கவந்த சீமானே ! |
|
வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
பாருமையா யானடியேன் பணிந்து உரைக்கின்றேன் |
|
மாத்தாம லெப்போதும் மானம் அபிமானம் வைத்து |
பாத்தோர்கள் மெச்சிடவே பாதி காவலுங் கொடுத்தீர் |
|
அருமையுடன் எங்களுக்குஅரசுகாவல் கொடுத்தீர். |
பெருமையுடன் எங்களுக்குப் பேரரசுங் கொடுத்தீர் |
|
கொப்புடனே எங்கள்குடி குலமெல்லாம் தழைக்கவே |
சேப்பிளையான் காவலென்றால் சீமையெல்லாம் கொண்டாட |
|
பேரும் கொடுத்தீர் பெரியதனமும் தான்கொடுத்தீர். |
ஆரும் மதித்திடவே ஆண்மைகள் உண்டாக்கிவைத்தீர். |
|
சாதரிப் பாகுடனே சால்வையுமே கொடுத்தீர். |
மாதரி பாகுடனே வல்லவாட்டுமே கொடுத்தீர். |
|
காதுக் கிசைந்த கடுக்கண் அரணாவுடனே |
தாதும் புனல்மார்பா சரப்பளியுமே கொடுத்தீர்2 |