|
|
தூதர் சொல் வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளை யானே ஆரியப்பூ ராசனவர் ஒன்னை அதிக சீக்கிரமாய் அழைத்து வரச் சொன்னார். வாருங்கள் சேப்பிளையானே. அப்படியே மகா பாக்கியமய்யா. |
சேப்பிளை சொல் விருத்தம் |
“அழைத்திடும் தூதா கேளாய் |
ஆரியப் பேந்திர மன்னன் |
தழைத்திட அழைத்தா ரென்றீர் |
தானுமே வாரே னென்று |
வளர்ந்திடும் புரவி யேறி |
மன்னவன் முன்னதாக |
பிழைத்திட கைவாய் பொத்தி |
புகலுரை செய்கு வாரே. |
தூதர் ராசனிடம் சொல் விருத்தம் |
செந்திருவை ஒத்தமதி சந்திரகுல சேகரா |
தீரனே வெகுபறாக்கு, |
|
ஸ்ரீரெங்கரடி பணியும் திரிசிரகிரி மேவும் |
செய்யகுணா வெகுபறாக்கு. |
|
அந்திமதி சூடிய நந்தியிடம் அருள் பெற்ற |
ஆரியர் வெகுபறாக்கு. |
|
அகிலாண்ட வல்லியொரு முகில்பூண்ட சேகரா |
அண்ணலே வெகுபறாக்கு |
|
எந்தநாளும் எங்கள் குலம் ஆல்போல் தழைத்திட |
அருள்பவா வெகுபறாக்கு |
|
எந்தனுக்கு அரசாக தீரவா சகமுதல் |
ஈந்தவா வெகுபறாக்கு |
|
உந்தனுட தூதர்கள் உரைசெய்ய யானுமே |
ஓடியே வந்தேனய்யா |
|
உத்தமனே யானடியேன் ஏதுகுறை செய்தாலும் |
உகந்தென்னை இரக்ஷிப்பீரே” |
நடை |
“அகமுத்தமே சொரியுமெங்கள் ஆரியப்பூ ராசேந்திரா |
அகமுத்தமே படைத்த துரையே உமைப்பணிந்தேன் |