பக்கம் எண் :

10காத்தவராயன் கதைப்பாடல்

 
     தூதர் சொல் வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளை யானே ஆரியப்பூ ராசனவர் ஒன்னை அதிக சீக்கிரமாய் அழைத்து வரச் சொன்னார். வாருங்கள் சேப்பிளையானே. அப்படியே மகா பாக்கியமய்யா.
சேப்பிளை சொல் விருத்தம்
“அழைத்திடும் தூதா கேளாய்
   ஆரியப் பேந்திர மன்னன்
 தழைத்திட அழைத்தா ரென்றீர்
   தானுமே வாரே னென்று
 வளர்ந்திடும் புரவி யேறி
   மன்னவன் முன்னதாக
 பிழைத்திட கைவாய் பொத்தி
   புகலுரை செய்கு வாரே.
தூதர் ராசனிடம் சொல் விருத்தம்
செந்திருவை ஒத்தமதி சந்திரகுல சேகரா
   தீரனே வெகுபறாக்கு,
 
ஸ்ரீரெங்கரடி பணியும் திரிசிரகிரி மேவும்
   செய்யகுணா வெகுபறாக்கு.
 
அந்திமதி சூடிய நந்தியிடம் அருள் பெற்ற
   ஆரியர் வெகுபறாக்கு.
 
அகிலாண்ட வல்லியொரு முகில்பூண்ட சேகரா
   அண்ணலே வெகுபறாக்கு
 
எந்தநாளும் எங்கள் குலம் ஆல்போல் தழைத்திட
   அருள்பவா வெகுபறாக்கு
 
எந்தனுக்கு அரசாக தீரவா சகமுதல்
   ஈந்தவா வெகுபறாக்கு
 
உந்தனுட தூதர்கள் உரைசெய்ய யானுமே
   ஓடியே வந்தேனய்யா
 
உத்தமனே யானடியேன் ஏதுகுறை செய்தாலும்
   உகந்தென்னை இரக்ஷிப்பீரே”
நடை
“அகமுத்தமே சொரியுமெங்கள் ஆரியப்பூ ராசேந்திரா
 அகமுத்தமே படைத்த துரையே உமைப்பணிந்தேன்