|
பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம் |
நாடியே கோட்டை மதிலேறி நாங்கள் |
நலமுடனே இறந்திடுவோ மென்ன” ராசா |
ஆடியே பதறியுள்ளம் அய்யர் பாதம் |
அடிபணிந்து அரசனுமே அருள் செய்வானே |
ராசன் சொல் விருத்தம் |
|
“திட்டமுடன் வேதியர்கள் சொல்மொழி யழிந்துவிட்டால் |
பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம் |
இஷ்டமுடன் உங்கள் மனதின்படி செய்திடுவேன் |
தெட்டிச் சிறையெடுத்ததொரு காத்தவனை தேடி |
கட்டியே மட்டக்கழுவில் ஏற்றுவேனே” |
|
வசனம் : ஆகோ கேளும் மாமறையோர்களே உங்கள் பெண்ணாகிய ஆரியமாலையைச் சிறையெடுத்துப் போன காத்தவனை ஒருவாரம் ஏழுநாளையில் தேடிபிடித்துக் கழுவில் போட்டு வைக்கிறோம். உங்கள் ஆச்சிரமத்திற்குப் போங்களய்யா சாமி. |
தூதருக்குச் சொல் விருத்தம் |
|
“தூதரே சொல்லக் கேளீர் |
துணிவுடன் ஆலம் பாக்கில் |
நீதியாய் வாழு மந்த |
நிறைந்த சேப்பிளையான் தன்னை |
சேதியைச் சொல்லி நீங்கள் |
சீக்கிரம் அழைத்தோ மென்று |
ஓடியே நீங்கள் கூட்டி |
ஒருநொடி தன்னில் வாரீர்” |
|
ராசன் சொல் வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே பாதிகாவற்கு அதிபதியாகிய அரசு காவல் சேப்பிள்ளையானை அழைத்து வாருங்கள் தூதர்களே |
தூதர் சேப்பிளையானுக்குச் சொல் விருத்தம் |
|
தேசமே பாதி காவல் |
சேப்பிளை யானே கேளாய் |
ராசனும் ஆரியப்பன் |
நலமுடன் உந்தன் மீது |
|
நேசமும் தவிர்ந்த திப்போ |
நெடிதுடன் கோப மாகி |
போசனும் அழைத்தா ரிப்போ |
பொடுக்கென ஓடி வாரீர். |