|
| பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம் |
| நாடியே கோட்டை மதிலேறி நாங்கள் |
| நலமுடனே இறந்திடுவோ மென்ன” ராசா |
| ஆடியே பதறியுள்ளம் அய்யர் பாதம் |
| அடிபணிந்து அரசனுமே அருள் செய்வானே |
| ராசன் சொல் விருத்தம் |
| |
| “திட்டமுடன் வேதியர்கள் சொல்மொழி யழிந்துவிட்டால் |
| பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம் |
| இஷ்டமுடன் உங்கள் மனதின்படி செய்திடுவேன் |
| தெட்டிச் சிறையெடுத்ததொரு காத்தவனை தேடி |
| கட்டியே மட்டக்கழுவில் ஏற்றுவேனே” |
| |
| வசனம் : ஆகோ கேளும் மாமறையோர்களே உங்கள் பெண்ணாகிய ஆரியமாலையைச் சிறையெடுத்துப் போன காத்தவனை ஒருவாரம் ஏழுநாளையில் தேடிபிடித்துக் கழுவில் போட்டு வைக்கிறோம். உங்கள் ஆச்சிரமத்திற்குப் போங்களய்யா சாமி. |
| தூதருக்குச் சொல் விருத்தம் |
| |
| “தூதரே சொல்லக் கேளீர் |
| துணிவுடன் ஆலம் பாக்கில் |
| நீதியாய் வாழு மந்த |
| நிறைந்த சேப்பிளையான் தன்னை |
| சேதியைச் சொல்லி நீங்கள் |
| சீக்கிரம் அழைத்தோ மென்று |
| ஓடியே நீங்கள் கூட்டி |
| ஒருநொடி தன்னில் வாரீர்” |
| |
| ராசன் சொல் வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே பாதிகாவற்கு அதிபதியாகிய அரசு காவல் சேப்பிள்ளையானை அழைத்து வாருங்கள் தூதர்களே |
| தூதர் சேப்பிளையானுக்குச் சொல் விருத்தம் |
| |
| தேசமே பாதி காவல் |
| சேப்பிளை யானே கேளாய் |
| ராசனும் ஆரியப்பன் |
| நலமுடன் உந்தன் மீது |
| |
| நேசமும் தவிர்ந்த திப்போ |
| நெடிதுடன் கோப மாகி |
| போசனும் அழைத்தா ரிப்போ |
| பொடுக்கென ஓடி வாரீர். |