பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்9

பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம்
   நாடியே கோட்டை மதிலேறி நாங்கள்
நலமுடனே இறந்திடுவோ மென்ன” ராசா
   ஆடியே பதறியுள்ளம் அய்யர் பாதம்
அடிபணிந்து அரசனுமே அருள் செய்வானே
ராசன் சொல் விருத்தம்
 
“திட்டமுடன் வேதியர்கள் சொல்மொழி யழிந்துவிட்டால்
   பாராளும் ராசனென் றெண்ண வேண்டாம்
 இஷ்டமுடன் உங்கள் மனதின்படி செய்திடுவேன்
   தெட்டிச் சிறையெடுத்ததொரு காத்தவனை தேடி
 கட்டியே மட்டக்கழுவில் ஏற்றுவேனே”
 
     வசனம் : ஆகோ கேளும் மாமறையோர்களே உங்கள் பெண்ணாகிய ஆரியமாலையைச் சிறையெடுத்துப் போன காத்தவனை ஒருவாரம் ஏழுநாளையில் தேடிபிடித்துக் கழுவில் போட்டு வைக்கிறோம். உங்கள் ஆச்சிரமத்திற்குப் போங்களய்யா சாமி.
தூதருக்குச் சொல் விருத்தம்
 
“தூதரே சொல்லக் கேளீர்
   துணிவுடன் ஆலம் பாக்கில்
 நீதியாய் வாழு மந்த
   நிறைந்த சேப்பிளையான் தன்னை
 சேதியைச் சொல்லி நீங்கள்
   சீக்கிரம் அழைத்தோ மென்று
 ஓடியே நீங்கள் கூட்டி
   ஒருநொடி தன்னில் வாரீர்”
 
     ராசன் சொல் வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே பாதிகாவற்கு அதிபதியாகிய அரசு காவல் சேப்பிள்ளையானை அழைத்து வாருங்கள் தூதர்களே
தூதர் சேப்பிளையானுக்குச் சொல் விருத்தம்
 
தேசமே பாதி காவல்
   சேப்பிளை யானே கேளாய்
ராசனும் ஆரியப்பன்
   நலமுடன் உந்தன் மீது
 
நேசமும் தவிர்ந்த திப்போ
   நெடிதுடன் கோப மாகி
போசனும் அழைத்தா ரிப்போ
   பொடுக்கென ஓடி வாரீர்.