|
| கதைப்பாடல் |
| சமையமெனும் கோமுதலைப் பாருதனில் |
| தானொளிக்கத் தயங்கி யுள்ளம் |
| அபையமென வேதியர்கள் அரசனிடம் |
| முறையிடவே அவர் வந்தாரே. |
| |
| கையிலே குலையும் பிடித்துக் |
| கதறியே மறையோ ரெல்லாம் |
| அய்யமார் பூணூல் குடுமி |
| அறுத்துச் கொண்ட பயமிட்டு |
| |
| “செய்யனே ! சீமை யாளும் |
| தீரனே ! ஆரியப்பா ! |
| அய்யனே சிறை யெடுத்தான் |
| ஆரென்று கேட்பீர் நீரே.” |
| |
| வசனம் : ராஜாதிராஜா ராஜபரமேஸ்வரா ராசமார்த்தாண்ட ராச ஒய்யார அரசுபதியாக திருசிரபுரம் ஆளப்பட்ட ஆரியப்பூராசனே பிறாதய்யா பிறாது. |
| நடை |
| வேதியர்கள் தன்முறை விளம்பியந்த ராசனவர் |
| ஆதி மறையவர்க்கு அன்பாய் நமஸ்கரித்து’ |
| |
| “ஏது மறையவரே இறைவரியால் நொந்ததுண்டோ? |
| |
| மாது சிறைபோனதுண்டோ? மாடாடு சேதமுண்டோ? |
| விள்ளவே எந்தனுக்கு விரும்பி உரையுமென்றார்” |
| |
| “கேட்டிடுவீர் எங்களுட பிராது தன்னை |
| கிளிமொழியாள் நானீன்ற மாலை தானும் |
| |
| நாட்டமுடன் குடமெடுத்து தண்ணீர் மோர்க்க |
| நடந்தாள் காண் கொள்ளடத்து நதியை நாடி |
| |
| வாட்டமில்லா சேப்பிளையான் மகனில் லாமல் |
| வளர்த்தான் காண் பிரமய்லே மகனென்றே தான் |
| |
| தேட்டமொடு காத்தவனாம் அவன் பேர்தான் |
| சிறையெடுத்தான் எங்கேயென்று தேடு வீரே” |
| அய்யர் சொல் விருத்தம். |
| “தேடியே நீரவனைப் பிடித்து உந்தன் |
| தேசமது அறிந்திடவே கழுவி லேற்றி |
| பாடியே அவனுயிரைக் கொல்லா விட்டால் |