பக்கம் எண் :

8காத்தவராயன் கதைப்பாடல்

கதைப்பாடல்
சமையமெனும் கோமுதலைப் பாருதனில்
   தானொளிக்கத் தயங்கி யுள்ளம்
அபையமென வேதியர்கள் அரசனிடம்
   முறையிடவே அவர் வந்தாரே.
 
கையிலே குலையும் பிடித்துக்
   கதறியே மறையோ ரெல்லாம்
அய்யமார் பூணூல் குடுமி
   அறுத்துச் கொண்ட பயமிட்டு
 
“செய்யனே ! சீமை யாளும்
   தீரனே ! ஆரியப்பா !
 அய்யனே சிறை யெடுத்தான்
   ஆரென்று கேட்பீர் நீரே.”
 
     வசனம் : ராஜாதிராஜா ராஜபரமேஸ்வரா ராசமார்த்தாண்ட ராச ஒய்யார அரசுபதியாக திருசிரபுரம் ஆளப்பட்ட ஆரியப்பூராசனே பிறாதய்யா பிறாது.
நடை
வேதியர்கள் தன்முறை விளம்பியந்த ராசனவர்
ஆதி மறையவர்க்கு அன்பாய் நமஸ்கரித்து’
 
“ஏது மறையவரே இறைவரியால் நொந்ததுண்டோ?
 
மாது சிறைபோனதுண்டோ? மாடாடு சேதமுண்டோ?
விள்ளவே எந்தனுக்கு விரும்பி உரையுமென்றார்”
 
“கேட்டிடுவீர் எங்களுட பிராது தன்னை
கிளிமொழியாள் நானீன்ற மாலை தானும்
 
நாட்டமுடன் குடமெடுத்து தண்ணீர் மோர்க்க
நடந்தாள் காண் கொள்ளடத்து நதியை நாடி
 
வாட்டமில்லா சேப்பிளையான் மகனில் லாமல்
வளர்த்தான் காண் பிரமய்லே மகனென்றே தான்
 
தேட்டமொடு காத்தவனாம் அவன் பேர்தான்
சிறையெடுத்தான் எங்கேயென்று தேடு வீரே”
அய்யர் சொல் விருத்தம்.
“தேடியே நீரவனைப் பிடித்து உந்தன்
   தேசமது அறிந்திடவே கழுவி லேற்றி
பாடியே அவனுயிரைக் கொல்லா விட்டால்