பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்15

அண்டரும் புகழ வாழும்
   ஆரியப் பேந்திர மன்னா
கண்டித மாகக் கூறும்
    காரியம் உரைசெய் வீரே.
 
     வசனம் : ஆகோ கேளுங்களய்யா சுவாமி அடியேன் சொல்ல வேண்டிய நீதிமார்க்கத்தைச் சொன்னேன். இனி கட்டளை உத்தரவின்படி நடக்கிறேன் ஐயா சாமி.
“உத்திரவு கேட்டதொரு சேப்பிளையே
   யானுனக்கு உகந்து சொல்வேன்
 பத்திரமாய் வளர்த்த பாலனெனவே
   பாராதே பார்த்தா யானால்
 
 குத்தமுமே வருமுனக்குக் குவலயத்தில்
   எனக்கரசு கோனும் கோவே
 சத்தியமாய்ச் சொன்னேனுன் தனயனையும்
   நீபிடித்துத் தருகு வாயே”
நடை
நாட்டுப்பாடல்
மன்னவன் கூற்று
சேப்பிளையான் சொன்னதற்கு திட்டமுடன் ராசாவும்
தாப்பரியமாகத் தான்வார்த்தை யிது சொல்வார்
 
“வாரும்பிள்ளாய் சேப்பிளையே ஒருவசன முரைக்கின்றேன்
ஆரும் மதித்திடநான் அதிகாரம் உந்தனுக்கு
 
பாரு முதலாகப் பாதிகாவல் உந்தனுக்கு
சாரும் பதிமுழுதும் சலுகை இருக்குதென்று
நூறுமலர்ப் பூங்குழலை நாமே சிறையெடுத்தோம்
 
கோலப் புள்ளிமீது குடியே இருக்குமோதான்
வேலி பயிரழித்தால் விளைகிறது எப்படித்தான்
 
பெற்றபிள்ளை யானாலும் யின்னொருவன் ஆனாலும்
குற்ற மதைக் கண்டளவில் கொன்றுவிட வேண்டாமோ?
 
ஆவலுடன் பிள்ளையென்ற ஆக்கினை செய்யாதிருந்தால்
காவல் கட்டுப்படுமோ? கண்டவர்க்கும் ஏற்காது
 
நீதியல்ல உந்தனுக்கு நானிலத்தோர் தான்சிரிப்பார்
பாதிகாவல் உந்தனுக்கு பட்டமது கட்டிவைத்தோம்