|
அண்டரும் புகழ வாழும் |
ஆரியப் பேந்திர மன்னா |
கண்டித மாகக் கூறும் |
காரியம் உரைசெய் வீரே. |
|
வசனம் : ஆகோ கேளுங்களய்யா சுவாமி அடியேன் சொல்ல வேண்டிய நீதிமார்க்கத்தைச் சொன்னேன். இனி கட்டளை உத்தரவின்படி நடக்கிறேன் ஐயா சாமி. |
“உத்திரவு கேட்டதொரு சேப்பிளையே |
யானுனக்கு உகந்து சொல்வேன் |
பத்திரமாய் வளர்த்த பாலனெனவே |
பாராதே பார்த்தா யானால் |
|
குத்தமுமே வருமுனக்குக் குவலயத்தில் |
எனக்கரசு கோனும் கோவே |
சத்தியமாய்ச் சொன்னேனுன் தனயனையும் |
நீபிடித்துத் தருகு வாயே” |
நடை |
நாட்டுப்பாடல் |
மன்னவன் கூற்று |
சேப்பிளையான் சொன்னதற்கு திட்டமுடன் ராசாவும் |
தாப்பரியமாகத் தான்வார்த்தை யிது சொல்வார் |
|
“வாரும்பிள்ளாய் சேப்பிளையே ஒருவசன முரைக்கின்றேன் |
ஆரும் மதித்திடநான் அதிகாரம் உந்தனுக்கு |
|
பாரு முதலாகப் பாதிகாவல் உந்தனுக்கு |
சாரும் பதிமுழுதும் சலுகை இருக்குதென்று |
நூறுமலர்ப் பூங்குழலை நாமே சிறையெடுத்தோம் |
|
கோலப் புள்ளிமீது குடியே இருக்குமோதான் |
வேலி பயிரழித்தால் விளைகிறது எப்படித்தான் |
|
பெற்றபிள்ளை யானாலும் யின்னொருவன் ஆனாலும் |
குற்ற மதைக் கண்டளவில் கொன்றுவிட வேண்டாமோ? |
|
ஆவலுடன் பிள்ளையென்ற ஆக்கினை செய்யாதிருந்தால் |
காவல் கட்டுப்படுமோ? கண்டவர்க்கும் ஏற்காது |
|
நீதியல்ல உந்தனுக்கு நானிலத்தோர் தான்சிரிப்பார் |
பாதிகாவல் உந்தனுக்கு பட்டமது கட்டிவைத்தோம் |