|
| அண்டரும் புகழ வாழும் |
| ஆரியப் பேந்திர மன்னா |
| கண்டித மாகக் கூறும் |
| காரியம் உரைசெய் வீரே. |
| |
| வசனம் : ஆகோ கேளுங்களய்யா சுவாமி அடியேன் சொல்ல வேண்டிய நீதிமார்க்கத்தைச் சொன்னேன். இனி கட்டளை உத்தரவின்படி நடக்கிறேன் ஐயா சாமி. |
| “உத்திரவு கேட்டதொரு சேப்பிளையே |
| யானுனக்கு உகந்து சொல்வேன் |
| பத்திரமாய் வளர்த்த பாலனெனவே |
| பாராதே பார்த்தா யானால் |
| |
| குத்தமுமே வருமுனக்குக் குவலயத்தில் |
| எனக்கரசு கோனும் கோவே |
| சத்தியமாய்ச் சொன்னேனுன் தனயனையும் |
| நீபிடித்துத் தருகு வாயே” |
| நடை |
| நாட்டுப்பாடல் |
| மன்னவன் கூற்று |
| சேப்பிளையான் சொன்னதற்கு திட்டமுடன் ராசாவும் |
| தாப்பரியமாகத் தான்வார்த்தை யிது சொல்வார் |
| |
| “வாரும்பிள்ளாய் சேப்பிளையே ஒருவசன முரைக்கின்றேன் |
| ஆரும் மதித்திடநான் அதிகாரம் உந்தனுக்கு |
| |
| பாரு முதலாகப் பாதிகாவல் உந்தனுக்கு |
| சாரும் பதிமுழுதும் சலுகை இருக்குதென்று |
| நூறுமலர்ப் பூங்குழலை நாமே சிறையெடுத்தோம் |
| |
| கோலப் புள்ளிமீது குடியே இருக்குமோதான் |
| வேலி பயிரழித்தால் விளைகிறது எப்படித்தான் |
| |
| பெற்றபிள்ளை யானாலும் யின்னொருவன் ஆனாலும் |
| குற்ற மதைக் கண்டளவில் கொன்றுவிட வேண்டாமோ? |
| |
| ஆவலுடன் பிள்ளையென்ற ஆக்கினை செய்யாதிருந்தால் |
| காவல் கட்டுப்படுமோ? கண்டவர்க்கும் ஏற்காது |
| |
| நீதியல்ல உந்தனுக்கு நானிலத்தோர் தான்சிரிப்பார் |
| பாதிகாவல் உந்தனுக்கு பட்டமது கட்டிவைத்தோம் |